நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரபலமடைவதற்கு இஸ்லாத்தை பயன்படுத்தாதீர்: சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை

ஷாஆலம்:

பிரபலமடைவதற்கு இஸ்லாத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இத்ரிஸ் ஷா எச்சரித்து உள்ளார்.

மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் இந்த விவகாரத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

எந்தவொரு சூழ்நிலையிலும் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள மார்க்கத்தை பயன்படுத்திக் கொள்ள கூடாது.

இந்த விவகாரத்தை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கடப்பாடு ஜாய்ஸ் எனும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகார பிரிவு, மாய்ஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய இலாகா ஆகியவற்றின் பொறுப்பாகும்.

சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாமிய மார்க்க விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் இந்த இரு இலாகாக்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் முடிவெடுக்கும் அதிகாரம் இவ்விரு இலாகாக்களுக்கு தான் உள்ளது.

ஆகவே, இந்த விவகாரத்தில் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset