நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்-அர்கம் தொடர்பான புத்தகங்களை புதைத்ததாக நம்பப்படும் தந்தை, 3 மகன்களுக்கு தடுப்பு காவல்

கோத்தாபாரு:

அல்-அர்கம் தொடர்பான புத்தகங்களை புதைத்ததாக நம்பப்படும்  தந்தை, 3 மகன்களுக்கு மூன்று நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டது.

குளோபல் இக்வானுக்கு எதிரான ஒப் குளோபல் கீழ் சம்பந்தப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இங்குள்ள கம்போங் பாஞ்சியில் அல்-அர்கம் தொடர்பான புத்தகங்களை புதைத்து ஆதாரங்களை அப்புறப்படுத்த முயன்றது தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதான நால்வரும் கோத்தபாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

அவர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமது கோரி போலிசார் விண்ணப்பம் செய்தனர்.

இந்த விண்ணப்பத்தை மாஜிஸ்திரேட் அஹ்மத் ஷாபிக் அய்ஷாத் ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நால்வருக்கும் மூன்று நாள் தடுப்பு காவலை நீதிமன்றம் விதித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset