நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வானுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த சிலாங்கூர் சுல்தான் உத்தரவு

ஷாஆலம்:

குளோபல் இக்வானுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா உத்தரவிட்டுள்ளார்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனைக் கூறினார்.

குளோபல் இக்வான் தொடர்பான சர்ச்சைகள் நாட்டில் நீடித்து வருகிறது.

இப் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு அது தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக குளோபல் இக்வான் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரிகள் முழு திறனுடன் செயல்பட வேண்டும்.

குறிப்பாக இதில் யாரும் சமரசம் கொள்ளக் கூடாது என சுல்தான் உத்தரவிட்டார்.

வாரந்திர சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது சுல்தான் இந்த உத்தரவை பிறப்பித்ததாக டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset