செய்திகள் மலேசியா
எஸ்ஆர்சி வாரிய உறுப்பினர்கள் என்னுடன் உடன்படவில்லை என்பது விந்தையானது: நஜீப்
கோலாலம்பூர்:
எஸ்ஆர்சி வாரிய உறுப்பினர்கள் என்னுடன் உடன்படவில்லை என்பது விந்தையான தகவலாகும்.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் இதனை கூறினார்.
எஸ்ஆர்சியின் முன்னாள் ஆலோசகர் என்ற முறையில் அதன் வாரிய உறுப்பினர்கள் என்னுடன் உடன்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் எனக்கு விந்தையானதாக உள்ளது.
நிதியமைச்சருக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு, ஒருங்கிணைந்த ஓய்வூதிய நிதியில் (குவாப்) இருந்து 1.18 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை மோசடி செய்ததில் தனக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
எஸ்ஆர்சியின் குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று காலை சாட்சியம் அளித்த அவர் கூறினார்.
முன்னதாக முன்னாள் பிரதமருக்கு எதிரான சிவில் நடவடிக்கையில், அந்த நேரத்தில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நிக் பைசல் அரிஃப் கமில் மூலம் இயக்குநர்கள் குழுவை நஜிப் கட்டுப்படுத்தினார் என்று எஸ்ஆர்சி குற்றம் சாட்டியது என்பது குறிப்பிடத்தகது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2024, 1:17 pm
இஸ்லாமிய நிதி மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த பேங்க் ரக்யாத் உறுதிபூண்டுள்ளது: டத்தோ இவான் பெனடிக்
September 25, 2024, 1:14 pm
மக்கோத்தாவில் அம்னோவுக்கு பாடம் கற்றுக் கொடுங்கள்; சைட் ஹுசைனுக்கு வாக்காளிக்க வேண்டாம்: ராமசாமி
September 25, 2024, 1:12 pm
ரவாங் குண்டாங்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்
September 25, 2024, 1:12 pm
அல்-அர்கம் தொடர்பான புத்தகங்களை புதைத்ததாக நம்பப்படும் தந்தை, 3 மகன்களுக்கு தடுப்பு காவல்
September 25, 2024, 1:09 pm
குளோபல் இக்வானை பின்பற்றுபவர்கள் இன்னும் நாட்டில் உள்ளனர்; வெளிநாடுகளுக்கு தப்பிப்பது கடினம்: ஐஜிபி
September 25, 2024, 1:05 pm
இணையப் பகடிவதையால் மரணமடைந்த ஈஷா வழக்கில் டுலால் பிரதர்ஸ் எனும் சதீஸ்குமாருக்கு 12 மாதம் சிறை
September 25, 2024, 10:34 am
குளோபல் இக்வானுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த சிலாங்கூர் சுல்தான் உத்தரவு
September 25, 2024, 10:30 am
குளோபல் இக்வானின் போதனைகள் இஸ்லாத்திற்கு எதிரானது: பினாங்கு முஃப்தி
September 25, 2024, 10:13 am