நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வானை பின்பற்றுபவர்கள் இன்னும் நாட்டில் உள்ளனர்; வெளிநாடுகளுக்கு தப்பிப்பது கடினம்: ஐஜிபி

கோலாலம்பூர்:

குளோபல் இக்வானை பின்பற்றுபவர்கள் இன்னும் நாட்டில் உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிப்பது மிகவும் கடினம்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குளோபல் இக்வானை பின்பற்றுபவர்கள் இன்னும் நாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஏனெனில் அவர்கள் தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளுக்குத் தப்பிச் செல்வது கடினம்.

காரணம் நிதி விவகாரங்களில் அவர்கள் அமைப்பின் உயர்மட்டத் தலைமையைச் சார்ந்துள்ளனர்.

குளோபல் இக்வானை பின்பற்றுபவர்கள் மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு, குறிப்பாக கிளந்தான் பகுதிக்கு தப்பிச் செல்ல இயலாது.

அவர்களுக்கு நிதிகள் கொடுப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset