நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரவாங் குண்டாங்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்

ரவாங்:

ரவாங்  குண்டாங்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை உறுதிப்படுத்தினார்.

கம்போங் பாரு குண்டாங்கில் அதிகாலை 2 மணியளவில் எம்பிவி காரில் சென்றவர்களை காரை நிறுத்துமாறு போலிசார் எச்சரித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

அதே வேளையில் காரில் இருந்தவர்கள் போலிஸ் வாகனத்தை நோக்கி சுட்டனர்.

போலிசார் திரும்பி சுட்டதில் குற்றவாளி என நம்பப்படும் ஆடவர் கொல்லப்பட்டார்.

அதே வேளையில் காரில் இருந்த மற்ற ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset