செய்திகள் வணிகம்
வங்கிக் கடனுதவி திட்டங்கள் குறித்து இந்திய வணிகர்களுக்கு விளக்கமளிப்பு
கோலாலம்பூர்:
வங்கிக் கடனுதவி திட்டங்கள் குறித்து இந்திய வணிகர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது என்று மைக்கியின் உதவித் தலைவர் மு. திருநாவுக்கரசு கூறினார்.
சிறுதொழில் நடுத்தர வணிகத்தில் ஈடுப்பட்டிருக்கும் இந்திய வர்த்தகர்களுக்கு வங்கி கடனுதவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மைக்கி இந்த விளக்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் மைக்கி, முவாமாலாட் வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது.
வரும் மே மாதத்தில் மைக்கியும் முவாமாலாட் வங்கியும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடவுள்ளன.
இதன் முன்னோட்டமாக இந்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
மைக்கியில் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
முவாமாலாட் வங்கியின் வர்த்தக பிரிவு தலைவர் டத்தோ நஸிர், மஸூரி தெங்கி லோங், குலா ஆகியோர் வங்கியின் சார்பில் கலந்து கொண்டனர்.
வங்கி அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு வணிகர்களுக்கு நேரடியாக உரிய விளக்கங்களை வழங்கினர்.
கிட்டத்தட்ட 74 சிறு நடுத்தர வணிகர்களுடன் பெரிய வர்த்தகர்களும் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
வரும் காலங்களில் இன்னும் பெரிய அளவில் இந்த விளக்கக் கூட்டங்களை நடத்த மைக்கி திட்டமிட்டு உள்ளது என்று திருநாவுக்கரசு கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது
March 7, 2024, 5:41 pm
இஸ்ரேல் போரின் விளைவால் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் இழந்து தவிக்கும் Starbucks
March 6, 2024, 12:05 pm
கோலாலம்பூருக்கு மீண்டும் பறக்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ்
March 5, 2024, 5:50 pm