நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

வங்கிக் கடனுதவி திட்டங்கள் குறித்து இந்திய வணிகர்களுக்கு விளக்கமளிப்பு

கோலாலம்பூர்:

வங்கிக் கடனுதவி திட்டங்கள் குறித்து இந்திய வணிகர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது என்று மைக்கியின்  உதவித் தலைவர் மு. திருநாவுக்கரசு கூறினார்.

சிறுதொழில் நடுத்தர வணிகத்தில் ஈடுப்பட்டிருக்கும் இந்திய வர்த்தகர்களுக்கு வங்கி கடனுதவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மைக்கி இந்த விளக்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதில் மைக்கி, முவாமாலாட் வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது.

வரும் மே மாதத்தில் மைக்கியும் முவாமாலாட் வங்கியும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடவுள்ளன.

இதன் முன்னோட்டமாக இந்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

மைக்கியில் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

முவாமாலாட் வங்கியின் வர்த்தக பிரிவு தலைவர் டத்தோ நஸிர், மஸூரி தெங்கி லோங், குலா ஆகியோர் வங்கியின் சார்பில் கலந்து கொண்டனர்.

வங்கி அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு வணிகர்களுக்கு நேரடியாக உரிய விளக்கங்களை வழங்கினர்.

கிட்டத்தட்ட 74  சிறு நடுத்தர வணிகர்களுடன் பெரிய வர்த்தகர்களும் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

வரும் காலங்களில் இன்னும் பெரிய அளவில் இந்த விளக்கக் கூட்டங்களை நடத்த மைக்கி திட்டமிட்டு உள்ளது என்று திருநாவுக்கரசு கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset