நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் 3 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கும்

கோலாலம்பூர்: 

வரும் ஜூன் மாதத்தின் நடைபெறவிருந்த 15-வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது தவணைக்கான இரண்டாவது கூட்டம், மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்ட விதிமுறைகளின் கூட்ட விதிமுறைகள் 11(2) இன் படி இந்த முடிவு எடுக்கப்பட்டதை நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ ஜோஹாரி அப்துல் தெரிவித்தார். ஜூன் 12 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மே 22 முதல் ஜூன் 15 வரை 11 நாட்களுக்கு நடைபெறும்.

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றக் கூட்ட அமர்வு தேதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார். இந்தத் தேதி மாற்றைப் பிரதமர் ஏற்றுக் கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset