
செய்திகள் உலகம்
சோமாலியாவில் பஞ்சத்தால் 43,000 பேர் பலி: ஐ.நா அறிவிப்பு
நைரோபி:
சோமாலியாவில் நிலவி வரும் பஞ்சத்தால் கடந்த ஆண்டு மட்டும் 43,000 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பும் குழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும், இந்த ஆண்டிலும் பஞ்சத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பார்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, லண்டன் கல்லூரியால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விவரம்:
சோமாலியாவிலும், அதன் அண்டை நாடான எத்தியோப்பியாவிலும் தொடர்ந்து 6ஆவது முறையாக பருவமழை பொய்த்தது.
இதன் காரணமாக, அங்கு கடந்த ஆண்டில் இதுவரை இல்லாத மிக மோசமான வறட்சி மற்றும் பஞ்சம் நிலவியது. இதில், பெரும்பாலான சிறுவர்கள் உள்பட 43,000 பேர் பலியாகினர்.
நடப்பு ஆண்டிலும் 60 லட்சம் பேர் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால், நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் சுமார் 18,000 பேர் பஞ்சத்தால் பலியாவார்கள் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
-ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2023, 6:26 pm
7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானில் சவூதி தூதரகம் மீண்டும் திறப்பு
June 6, 2023, 3:52 pm
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கு நாட்டின் உயரிய விருது
June 6, 2023, 2:34 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹஜ்ஜு பெருநாளுக்கு நீண்ட விடுமுறைகள்
June 6, 2023, 1:06 pm
ஓமனில் 7,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது: தொழிலாளர் அமைச்சகம் நடவடிக்கை
June 6, 2023, 12:32 pm
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை - பிரச்சாரம் துவங்கியது
June 6, 2023, 11:51 am
27 பள்ளி மாணவிகளைக் கற்பழித்ததாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் கைது
June 6, 2023, 9:44 am
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் திடீர் நிலச்சரிவு 14 பேர் பலி - 5 பேர் மாயம்
June 3, 2023, 4:28 pm
மனைவிக்கு 2ஆம் இடம் கிடைத்த ஆத்திரம்: அழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த கணவர்
June 3, 2023, 12:32 pm
காணாமல் போன 4 வயது சிறுவன் துணி துவைக்கும் இயந்திரத்தில் பிணமாக மீட்கப்பட்டான்
June 3, 2023, 12:06 pm