நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் கிறிஸ்டல் பேளஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேளஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணிக்காக  புகாயா சகா இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை கேப்ரியல் மார்தினெலி, கிரானிட் சகா ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் 69 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset