நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் யுனைடெட்

லண்டன்:

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் முன்னேறி உள்ளனர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை புருனோ பெர்னாண்டஸ், மார்சல் சபிட்ஷெர் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

மற்ற ஆட்டங்களில் பிரிக்டோன், சிப்பீல்ட் யுனைடெட் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset