
செய்திகள் மலேசியா
தேசிய மற்றும் இடைநிலைப் பள்ளியில் தமிழ்க் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்: மஇகா வலியுறுத்து
போர்ட்டிக்சன்:
தேசிய மற்றும் இடைநிலைப் பள்ளியில் தமிழ்க் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
மஇகா தொகுதித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, தமிழ்ப்பள்ளி குறித்தும் தமிழ்க் கல்வி குறித்தும் கேள்விகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பில் பலர் கருத்து தெரிவித்தனர்.
மலேசியாவில் வாழும் இந்திய சமுதாயத்தின் அடையாளமாக தமிழ்ப்பள்ளிகள் விளங்கி வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் தற்போது மாணவர்கள் பற்றாக்குறை பிரச்சினை நிகழ்வுகிறது. இதற்கு முதலில் தீர்வு காண வேண்டும்.
நமது மாணவர்களை தமிழ்ப்பள்ளிகளுக்கு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அதே வேளையில் 6ஆம் ஆண்டுக்குப் பின் அவர்கள் தமிழ்க் கல்வியை பயில்வதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
காரணம், தமிழ்ப்பள்ளியை காப்பாற்றுவதற்காக பிள்ளைகளை இப் பள்ளியில் சேர்த்து விட்டு இடைநிலைப் பள்ளி சென்றதும் தமிழ்க் கல்வியை பயிலாமல் இருப்பது சரியாக இருக்காது.
இப்படி இருந்தால் தமிழ்க் கல்வியும் மொழியும் எப்படி வளரும் என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது.
இதன் அடிப்படையில்தான் தேசிய மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்க் கல்வி கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன்நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2025, 5:55 pm
சார்ஜன் எஸ்.பெருமாளின் திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
May 13, 2025, 5:29 pm
மொஹைதீனுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணை: புதிய நிதிபதி வழக்கை செவிமடுப்பார்
May 13, 2025, 5:26 pm
தெலுக் இந்தான் சாலை விபத்தில் FRU அதிகாரிகள் மரணம்: மாமன்னர் தம்பதியர் இரங்கல்
May 13, 2025, 5:10 pm
தீயணைப்பு நிலையப் பின்னணியில் Pre Wedding Photoshoot செய்த தம்பதியின் காணொலி வைரல்
May 13, 2025, 5:09 pm
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 10.5% குறைந்துள்ளது
May 13, 2025, 3:44 pm