
செய்திகள் உலகம்
புதினுக்கு எதிராக போர் குற்றத்துக்கான பிடிவாரண்ட்
தி ஹேக்:
உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர் குற்றத்துக்கான வாரண்டை பிறப்பித்துள்ளது.
அதில், போர் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததன் மூலம் அங்குள்ள குழந்தைகளை அபகரித்து சென்றதாகவும், சட்டவிரோதமாக நாடு கடத்தலில் ஈடுபட்டதாகவும் புதின் மீது போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேபோல், ரஷியாவின் குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மரியா அலேக்சியிவ்னா லவோவா மீதும் இதே குற்றச்சாட்டுக்காக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணையில் இருவர் மீதும் போர் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கைது செய்யும் அமைப்பு ஏதும் இல்லாததால் இந்த உத்தரவு வெறும் அறிவிப்பாக இருக்கும். இந்த சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2025, 11:03 am
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு
May 11, 2025, 11:55 am
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
May 11, 2025, 11:53 am
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியிக்கு அரசு தடை விதிப்பு
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am