செய்திகள் உலகம்
புதினுக்கு எதிராக போர் குற்றத்துக்கான பிடிவாரண்ட்
தி ஹேக்:
உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர் குற்றத்துக்கான வாரண்டை பிறப்பித்துள்ளது.
அதில், போர் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததன் மூலம் அங்குள்ள குழந்தைகளை அபகரித்து சென்றதாகவும், சட்டவிரோதமாக நாடு கடத்தலில் ஈடுபட்டதாகவும் புதின் மீது போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேபோல், ரஷியாவின் குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மரியா அலேக்சியிவ்னா லவோவா மீதும் இதே குற்றச்சாட்டுக்காக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணையில் இருவர் மீதும் போர் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கைது செய்யும் அமைப்பு ஏதும் இல்லாததால் இந்த உத்தரவு வெறும் அறிவிப்பாக இருக்கும். இந்த சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 5:15 pm
சர்வதேச காற்று மாசுபாடு அளவின் முதலிடத்தில் பாகிஸ்தான்: ஆசிய நகரங்களைச் சூழும் புகைமூட்டம்
March 24, 2026, 4:23 pm
"அந்த ஒரு போன் கால்.. மாறியது உலக வரலாறு": ஈரானைத் தாக்க டிரம்பை சம்மதிக்க வைத்த நெதன்யாகு
March 24, 2026, 12:14 pm
"பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை!": அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
March 24, 2026, 11:57 am
லண்டலில் பரபரப்பு: யூத வழிபாட்டுத் தலம் அருகே தீவைப்புச் சம்பவம்
March 24, 2026, 11:56 am
காலம் கடந்தும் நிலைக்கும் காதல்: மனைவியின் கடைசி நிமிடம் வரை போராடிய 82 வயது கணவர்
March 24, 2026, 11:47 am
"இளைஞர்களின் உயிருடன் விளையாடாதீர்கள்": ராணுவ அதிகாரிகளைச் சாடிய அதிபர் பீட்ரோ
March 24, 2026, 10:52 am
ஒப்பந்தம் ஏற்பட்டால் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும்
March 24, 2026, 10:28 am
பெரு நாட்டில் பயங்கர சாலை விபத்து: 13 பேர் உயிரிழப்பு
March 23, 2026, 8:40 pm
