
செய்திகள் உலகம்
புதினுக்கு எதிராக போர் குற்றத்துக்கான பிடிவாரண்ட்
தி ஹேக்:
உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர் குற்றத்துக்கான வாரண்டை பிறப்பித்துள்ளது.
அதில், போர் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததன் மூலம் அங்குள்ள குழந்தைகளை அபகரித்து சென்றதாகவும், சட்டவிரோதமாக நாடு கடத்தலில் ஈடுபட்டதாகவும் புதின் மீது போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேபோல், ரஷியாவின் குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மரியா அலேக்சியிவ்னா லவோவா மீதும் இதே குற்றச்சாட்டுக்காக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணையில் இருவர் மீதும் போர் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கைது செய்யும் அமைப்பு ஏதும் இல்லாததால் இந்த உத்தரவு வெறும் அறிவிப்பாக இருக்கும். இந்த சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2023, 1:31 pm
யூதக் குடியேற்ற தடை சட்டத்தை ரத்து செய்தது இஸ்ரேல்
March 22, 2023, 1:22 pm
கனடா பள்ளியில் ஆசிரியர்களைக் கத்தியால் குத்திய மாணவன்
March 22, 2023, 10:31 am
ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது
March 22, 2023, 9:11 am
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 9 பேர் பலி
March 22, 2023, 12:45 am
சோமாலியாவில் பஞ்சத்தால் 43,000 பேர் பலி: ஐ.நா அறிவிப்பு
March 21, 2023, 9:51 pm
அமெரிக்காவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
March 20, 2023, 7:37 pm
அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய வட கொரியா தயார்
March 20, 2023, 6:58 pm
தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு
March 20, 2023, 3:47 pm