
செய்திகள் இந்தியா
லண்டனில் ராகுல் பேச்சும், அதானி விவகாரத்தாலும் இந்திய நாடாளுமன்றம் முடக்கம்
புது டெல்லி:
இந்திய ஜனநாயகம் தொடர்பாக லண்டனில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோருமாறு பாஜகவினரும், அதானி விவகாரம் எழுப்பி எதிர்க்கட்சியினரும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து 2ஆவது நாளாக முடங்கின.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய ஜனநாயகம் சீர்குலைந்து வருவதாக லண்டனுக்கு அண்மையில் சென்ற ராகுல் காந்தி பேசியிருந்தார். இந்த விவகாரத்தை முதல் நாள் கூட்டத்தில் எழுப்பிய பாஜகவினர், ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்றனர். இதனால் கூட்டம் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டாம் நாளிலும், ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய அமைச்சர்கள் உள்பட பாஜக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர்.
அவர்களுக்குப் போட்டியாக காங்கிரஸ் எம்.பி.க்களும் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் இந்தியா குறித்து தெரிவித்த முறையற்ற கருத்துகளைத் தொகுத்து பதாகைகளாக அச்சடித்து கைகளில் ஏந்தியிருந்தனர்.
ஆளும் கட்சி எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பியதால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதே விவகாரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am