நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் Hari Raya Mega Sale சந்தையில் உரிமம் இல்லாமல் இயங்கிய 24 உணவுக் கடைகள் மூடப்பட்டன

சிங்கப்பூர்:

இவ்வாண்டின் Hari Raya Mega Sale சந்தையில் உரிமம் இல்லாமல் இயங்கிய 24 உணவுக் கடைகள் மூடப்பட்டன என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு இன்று (11 மார்ச்) தெரிவித்தது.

Singapore Expoவில் கடைகளை நடத்தியவர்களில் சிலர் பதிவுசெய்யாமல் வேலை செய்ததை அதிகாரிகள் கண்டறிந்ததாக அது கூறியது.

பொதுமக்களின் நலனைக் கருதி அந்தக் கடைகள் மூடப்பட்டதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Megaxpress International நிறுவனம் கூறியது.

தற்காலிகமாக நடத்தப்படும் சந்தையில் கடைகளை வைத்திருப்பவர்கள் உரிமம் பெற்றிருக்கவேண்டும் எனச் சிங்கப்பூர் உணவு அமைப்பு வலியுறுத்தியது.

நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 2 வாரங்களுக்கு முன்னரே அந்த உரிமத்தைப் பெற விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.

விதிகளை மீறினால் 2000 சிங்கப்பூர் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset