செய்திகள் வணிகம்
கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு வாடிக்கையாளர் விவரம் அவசியம்
புது டெல்லி:
கிரிப்டோகரன்சி எனும் டிஜிட்டல் பண வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
எண்ம பணப் பரிவர்த்தனைகள் மூலம் கருப்புப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஒன்றிய நிதியமைச்சகம் எடுத்துள்ளது.
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தரகு அமைப்புகள் இனி கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் தகவல் அளிக்கும் அமைப்புகளாகவும் செயல்பட வேண்டும்.
அதாவது சந்தேகத்துக்கு இடமான பரிவர்த்தனைகள் நடைபெறும்போது அது தொடர்பாக வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய கண்காணிப்பு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை விவரத்தையும் 5 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவது, கருப்புப் பணத்தை பயங்கரவாதத்துக்கு மடைமாற்றுவது, தேசத்துக்கு எதிரான செயல்களில் கருப்புப் பணத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், கருப்புப் பண முறைகேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது
March 7, 2024, 5:41 pm