செய்திகள் வணிகம்
கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு வாடிக்கையாளர் விவரம் அவசியம்
புது டெல்லி:
கிரிப்டோகரன்சி எனும் டிஜிட்டல் பண வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
எண்ம பணப் பரிவர்த்தனைகள் மூலம் கருப்புப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஒன்றிய நிதியமைச்சகம் எடுத்துள்ளது.
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தரகு அமைப்புகள் இனி கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் தகவல் அளிக்கும் அமைப்புகளாகவும் செயல்பட வேண்டும்.
அதாவது சந்தேகத்துக்கு இடமான பரிவர்த்தனைகள் நடைபெறும்போது அது தொடர்பாக வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய கண்காணிப்பு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை விவரத்தையும் 5 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவது, கருப்புப் பணத்தை பயங்கரவாதத்துக்கு மடைமாற்றுவது, தேசத்துக்கு எதிரான செயல்களில் கருப்புப் பணத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், கருப்புப் பண முறைகேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 12:24 pm
அடுத்த வார ரிங்கிட் மதிப்பில் சிறிய மாற்றம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
April 30, 2026, 12:58 pm
தொழில்நுட்ப மையமாக உருவெடுக்கும் மலேசியா: ஏர்டிரங்க் நிறுவனத்தின் RM27 பில்லியன் ரிங்கிட் திட்டம்
April 30, 2026, 11:23 am
அன்னாசித் துறையில் புதிய புரட்சி: ஜொகூரில் தொழில்நுட்பப் பகிர்வு திட்டங்கள் தீவிரம்
April 29, 2026, 3:02 pm
அமெரிக்கா - ஈரான் மோதல்: அதிரடியாக உயர்ந்த உலகளாவிய கச்சா எண்ணெய் விலை
April 23, 2026, 2:55 pm
இன்று தங்க விலை சரிந்தது
April 21, 2026, 4:08 pm
குழந்தைகள் உணவில் எலி விஷம்: விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்
April 21, 2026, 12:41 pm
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: முக்கிய உலக நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் ஏற்றம்
April 15, 2026, 11:49 am
