
செய்திகள் வணிகம்
கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு வாடிக்கையாளர் விவரம் அவசியம்
புது டெல்லி:
கிரிப்டோகரன்சி எனும் டிஜிட்டல் பண வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
எண்ம பணப் பரிவர்த்தனைகள் மூலம் கருப்புப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஒன்றிய நிதியமைச்சகம் எடுத்துள்ளது.
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தரகு அமைப்புகள் இனி கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் தகவல் அளிக்கும் அமைப்புகளாகவும் செயல்பட வேண்டும்.
அதாவது சந்தேகத்துக்கு இடமான பரிவர்த்தனைகள் நடைபெறும்போது அது தொடர்பாக வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய கண்காணிப்பு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை விவரத்தையும் 5 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவது, கருப்புப் பணத்தை பயங்கரவாதத்துக்கு மடைமாற்றுவது, தேசத்துக்கு எதிரான செயல்களில் கருப்புப் பணத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், கருப்புப் பண முறைகேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am