செய்திகள் வணிகம்
கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு வாடிக்கையாளர் விவரம் அவசியம்
புது டெல்லி:
கிரிப்டோகரன்சி எனும் டிஜிட்டல் பண வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
எண்ம பணப் பரிவர்த்தனைகள் மூலம் கருப்புப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஒன்றிய நிதியமைச்சகம் எடுத்துள்ளது.
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தரகு அமைப்புகள் இனி கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் தகவல் அளிக்கும் அமைப்புகளாகவும் செயல்பட வேண்டும்.
அதாவது சந்தேகத்துக்கு இடமான பரிவர்த்தனைகள் நடைபெறும்போது அது தொடர்பாக வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய கண்காணிப்பு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை விவரத்தையும் 5 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவது, கருப்புப் பணத்தை பயங்கரவாதத்துக்கு மடைமாற்றுவது, தேசத்துக்கு எதிரான செயல்களில் கருப்புப் பணத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், கருப்புப் பண முறைகேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
ஆர்சிபி அணி படத் தயாரிப்பு நிறுவனத்திடம் விலை பேசப்படுகிறது?
November 14, 2025, 4:21 pm
உணவு தயாரிக்கும் தொழில்துறையில் பீடுநடை போடும் பிரான்சிஸ் மார்ட்டின்
November 11, 2025, 2:35 pm
பெரோடுவா மின்சார கார் அறிமுகம்; தேசிய விழா பட்டியலில் உள்ளது: பிரதமர்
November 5, 2025, 3:47 pm
பெர்மிம் பேரவையின் வீட்டிலிருந்தே வணிகம்: இணையத்தில் விரிவாக்கம் செய்யும் கருத்தரங்கு
October 29, 2025, 12:21 pm
வணக்கம் இந்தியா நான்காம் கிளை உணவகம் ஜொகூர் தாமான் உங்கு துன் அமினாவில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது
October 25, 2025, 8:30 pm
