நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஐக்கிய அமீரகம் துபாய் புஜைராவில் 'பொங்கலோ ஓ பொங்கல்' விழா

துபாய் :

உலகத் தமிழர் வரலாற்றில் முதல் முறையாக, உலக பொதுமுறை திருக்குறளுக்கு பெருமை சேர்க்க, 2660 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து, பொங்கலோ ஓ பொங்கல் விழா துபாய் புஜைராவில் நடந்தது.

இவ்விழாவில், கல்வியாளரும் வி. ஐ. டி பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஜி. விஸ்வநாதன், முன்னாள் ஐ.ஏ.ஸ் அதிகாரியுமான சகாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். துபாய் தமிழ் சங்கத்தின் தலைவரும் தொழில் அதிபருமான  ஜெயந்திமாலா சுரேஷ் வரவேற்றார். பொங்கல் விழாவில் uபல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

முன்னாள், ஐ.ஏ.ஸ் அதிகாரி சகாயம் அவர்கள் பேசும் பொழுது,கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நான், அந்த அமைதியை உடைத்து துபாயில் தமிழ் மக்களாகிய உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

விமான நிலையத்தில் இருந்து வரும் பொழுது தமிழகத்தில் இருந்து வருக்கிறீர்களா என ஒருவரும், தமிழ்நாட்டில் இருந்து வருக்கிறீர்களா என இன்னொருவரும் கேட்டனர்.  தமிழை என் அகத்தில் தாங்கி தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன் என பதில்  சொன்னேன்.

No photo description available.

உலகில் உள்ள 6 ஆயிரம் மொழிகளில் மனித குலத்திற்கு பண்பாட்டை கற்றுத் தந்த மொழி தமிழ். நான் விவசாயியின் மகன். அன்றைய கால கட்டத்தில் இளைஞர்களின் கனவு ஐ.ஏ.ஸ் ஆக வேண்டும் என்பதுதான்.

தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே ஐ.ஏ.ஸ் தேர்வும் எழுதி தேர்ச்சியும் பெற்றேன். டெல்லிக்கு நேர்முகதேர்வு எழுத சென்ற பொழுது, அங்குள்ள அதிகாரிகள் தமிழ் மொழியின் சிறப்பை பற்றி விவாதித்தனர்.

இந்தியாவின் ஆட்சி மொழியாக எதை வைத்துக் கொள்ளலாம் என கேட்டனர்.

கைக்கெட்டும் தூரம் ஐ.ஏ.ஸ் பணி காத்திருக்கிறது என தெரிந்தும்,அது கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை என தமிழ் மொழிதான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என துணிந்து சொன்னேன்.

கடந்த 2020 ஆண்டு நேர்மை வேண்டுமா? ஐ.ஏ.ஸ் வேண்டுமா என கேட்டார்கள். நேர்மைதான் வேண்டும் ஐ.ஏ.ஸ் பதவி வேண்டாம் என விருப்ப ஓய்வு பெற்றேன்.

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மலையை உடைக்க அரசாணை வந்த போது, பொது சொத்தை திருடுவதை ஒருபோதும் விரும்பாத நான் அந்த மலையைக் காப்பாற்ற அறிக்கை தயார் செய்து நீதிமன்றம் மூலம் தடுத்தேன். இன்று அந்த அரிட்டாப்பட்டி மலை தொல்லியல் துறையினர் பாதுகாப்பில் பல்லுயிர் பாரம்பரிய தலமாக உள்ளது என சகாயம் பேசினார்.

இந்த பொங்கல் துபாய் தொழில் அதிபர்கள் லியாகத் அலி, பெருமாள், முஹம்மது தாஹா மற்றும் துபாய் வாழ் மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மாஸ் ஈவென்ட்ஸ் முருகேஷ் தலைமையில் செய்திருந்தினர்.

- தயாளன் ஷண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset