
செய்திகள் மலேசியா
1.7 மில்லியன் மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் இதுவரை 1.7 மில்லியன் மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் எட்டப்பட்டுள்ள மிக முக்கிய மைல்கல்லில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
ஜூன் 20 வரையிலான தரவுகளின்படி நாட்டில் 568,282 மூத்த குடிமக்கள் இரு தவணை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டது தெரிய வருவதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹாருன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் மொத்தம் 3.2 மூத்த குடிமக்கள் உள்ளனர். அவர்களில் தடுப்பூசிக்காக 2.6 மில்லியன் பேர் பெயர்களைப் பதிந்துள்ளனர்.
"இவ்வாறு பெயர்களைப் பதிந்துள்ள அனைத்து மூத்த குடிமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என ஊக்குவிக்கப்படுகிறார்கள். மற்றவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்று இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் ரினா ஹாருன் தெரிவித்தார்.
பெருந்தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் சமூக திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகள் மலேசியாவில் அண்மைய சில தினங்களில் தொடர்ந்து எட்டப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
July 24, 2025, 11:34 pm
வங்கி பணப்பட்டுவாடா அட்டை மூலம் பண மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் டாங் வாங்கி போலீஸ் ந...
July 24, 2025, 5:06 pm
பேருந்தில் இருக்கை பட்டை அணியாத 1,200 பயணிகளுக்கு அபராதம்
July 24, 2025, 4:47 pm
சிறு, குறு, நடுத்தர வணிகர்களுக்கான உதவிகள் நீண்டக் கால திட்டங்களாக வகுக்க வேண்டும்...
July 24, 2025, 4:46 pm
வணிகம் மேற்கொள்வதற்கான அடிப்படை பொருட்கள் வாங்கித் தரும் திட்டத்திற்கு மித்ரா கூடு...
July 24, 2025, 3:45 pm
எதிர்கால தொழிலாளர் சக்திக்கு திவேட் முக்கிய தூண் எனும் அரசாங்கத்தின் கொள்கையை மலேச...
July 24, 2025, 2:49 pm
100 ரிங்கிட் சாரா உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்ய தேவையில்லை: நிதியமைச்சகம்
July 24, 2025, 1:48 pm
ஷாங்காயில் ஜோ லோ இருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை: சைபுடின்
July 24, 2025, 1:47 pm
அதிகமான அழுத்தம் கொடுத்தால் இன்னும் அதிகமானோர் அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...
July 24, 2025, 1:46 pm
ஜம்ரி வினோத் - ஃபிர்டாவ்ஸ் வோங் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை அள...
July 24, 2025, 1:06 pm