நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் நியூகாஸ்டல்

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு நியூகாஸ்டல் அணியினர் முன்னேறியுள்ளனர்.

எஸ்டி ஜேம்ஸ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் சௌத்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் சௌத்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோல்களை சீன் லோங்ஸ்தாவ் அடித்தார்.

இரு ஆட்டங்களின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நியூகாஸ்டல் அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.

கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பின் நியூகாஸ்டல் அணியினர் இந்த இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset