செய்திகள் உலகம்
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
பெய்ஜிங்:
சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் மாநிலத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி காலை 7.49 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
சின்ஜியாங்கில் உள்ள விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்த பயணிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் பயந்து அங்கிருந்து வெளியே ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, காயமோ அல்லது பெரிய அளவில் பொருள் சோதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
கடந்த 2008ஆம் ஆண்டு சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிச்சுவான் மாகாணத்தை 7.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதும் இதில் சுமார் 90,000 பேர் பலியானதும் நினைவுகூரத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2026, 3:50 pm
காங்கோவில் வேகமாக பரவும் இபோலா வைரஸ்: இதுவரை 473 பேர் பலி
July 4, 2026, 2:06 pm
மறைந்த முன்னாள் ஈரானிய உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கு
July 4, 2026, 2:02 pm
“நான் இந்தியாவில் இருந்திருந்தால் என்னால் சிஇஓ ஆகியிருக்க முடியாது”: இந்திரா நூயி
July 3, 2026, 12:36 pm
ஜூலை முதல் செப்டம்பர் வரை உலகை உலுக்கும் எல் நினோ தீவிரம் பெறுகிறது: ஐ.நா. எச்சரிக்கை
July 3, 2026, 11:58 am
அமெரிக்கா உலகக் கோப்பையை வென்றால், நிலவுக்குக் கால்பந்து பறக்கும்: நாசாவின் வாக்குறுதி
July 3, 2026, 11:13 am
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்த ரஷ்ய நாட்டு ஜோடி கைது
July 3, 2026, 11:02 am
