
செய்திகள் இந்தியா
சிறுநீர் கழிப்பு விவகாரம்: 2-ஆவது சம்பவத்தை மறைத்த ஏர் இந்தியாவுக்கு அபராதம்
புதுடெல்லி:
ஏர் இந்தியா விமானத்தில் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி பயணம் செய்த பெண் ஒருவரின் இருக்கையில் இருந்த போர்வை மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இது, ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற 2-ஆவது சம்பவமாகும்.
முன்னதாக, நவம்பர் 26-ஆம் தேதி நியூயார்க்-டெல்லி விமானத்தில் பெண் பயணியின் மீது சக ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பொது வெளியில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது.
இதையடுத்து, ஏர் இந்தியாவுக்குஅபராதம் விதிக்கப்பட்டதுடன், விமானியின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு சிறுநீர்கழிப்பு சம்பவம் தொடர்பாக, விமானப் போக்குவரத்து அமைச்சகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்ட பிறகே அது வெளிச்சத்துக்கு வந்தது.
அதுவரையில், இந்த விவகாரம் குறித்து புகாரளிக்காமல் ஏர் இந்தியா மறைக்கும் நோக்கில் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தெரிவிக்காமல் இருந்ததற்காக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
February 2, 2023, 5:57 pm
பூட்டானுக்கு ரூ.2,400 கோடி, இலங்கைக்கு ரூ. 150 கோடி: இந்தியா அறிவிப்பு
February 2, 2023, 3:52 pm
10 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பில்லை: பட்ஜெட்டில் ஏமாற்றம்
February 2, 2023, 2:34 pm
2 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர் சித்திக் காப்பான் விடுதலை
February 2, 2023, 1:08 pm
பான் கார்டு பொது அடையாள அட்டை
February 2, 2023, 12:59 am
ஏர் இந்தியாவில் சிறுநீர் கழித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன்
February 1, 2023, 11:19 pm
மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
February 1, 2023, 11:08 pm
வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக அதிகரிப்பு
February 1, 2023, 4:14 pm
ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
February 1, 2023, 4:06 pm