செய்திகள் இந்தியா
சிறுநீர் கழிப்பு விவகாரம்: 2-ஆவது சம்பவத்தை மறைத்த ஏர் இந்தியாவுக்கு அபராதம்
புதுடெல்லி:
ஏர் இந்தியா விமானத்தில் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி பயணம் செய்த பெண் ஒருவரின் இருக்கையில் இருந்த போர்வை மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இது, ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற 2-ஆவது சம்பவமாகும்.
முன்னதாக, நவம்பர் 26-ஆம் தேதி நியூயார்க்-டெல்லி விமானத்தில் பெண் பயணியின் மீது சக ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பொது வெளியில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது.
இதையடுத்து, ஏர் இந்தியாவுக்குஅபராதம் விதிக்கப்பட்டதுடன், விமானியின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு சிறுநீர்கழிப்பு சம்பவம் தொடர்பாக, விமானப் போக்குவரத்து அமைச்சகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்ட பிறகே அது வெளிச்சத்துக்கு வந்தது.
அதுவரையில், இந்த விவகாரம் குறித்து புகாரளிக்காமல் ஏர் இந்தியா மறைக்கும் நோக்கில் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தெரிவிக்காமல் இருந்ததற்காக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
