
செய்திகள் வணிகம்
2024க்குள் சிங்கப்பூர் சுற்றுலா துறை கொரோனாவுக்கு முந்தின வளர்ச்சி நிலையை அடையும்
சிங்கப்பூர்:
வருகிற 2024ஆம் ஆண்டுக்குள் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முந்தின வளர்ச்சி நிலையை சிங்கப்பூர் சுற்றுலா துறை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று பரவலால் உலக நாடுகள் முழுவதும் மக்கள் 3 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். ரெயில், விமானம், வாகன போக்குவரத்து முடங்கிய சூழலில் சுற்றுலா துறையின் வளர்ச்சியும் பெருமளவில் தேக்கம் அடைந்தது.
இவற்றில் இருந்து நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வர முயன்று கொண்டிருக்கின்றன. இவற்றில் சிங்கப்பூரும் ஒன்று. எனினும், கடந்த 2022-ம் ஆண்டில் அந்நாடு சுற்றுலா துறையில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டில் 40 லட்சம் முதல் 60 லட்சம் வரை சுற்றுலாவாசிகளின் வருகை இருக்கும் என அந்நாட்டு சுற்றுலா வாரியம் கணிப்பு வெளியிட்டு இருந்தது.
ஆனால், அதனை பொய்யாக்கும் வகையில், சுற்றுலாவாசிகள் வருகை அதிகரித்து இருந்தது. இதுபற்றி கடந்த வாரம் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலில், மொத்தம் 63 லட்சம் பேர் சிங்கப்பூருக்கு கடந்த ஆண்டில் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கின்றது.
இவற்றில் முதல் இடத்தில் 11 லட்சம் பேர் என்ற எண்ணிக்கையுடன் இந்தோனேசியா முதல் இடத்திலும், 6.86 லட்சம் பேர் என்ற எண்ணிக்கையுடன் இந்தியா 2-வது இடத்திலும், 5.91 லட்சம் என்ற எண்ணிக்கையுடன் மலேசியா 3-வது இடத்திலும் உள்ளன.
இதனால், பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் சுற்றுலா தலங்கள் என பார்வையாளர்களுக்கான பல்வேறு வகை வசதிகளை கொண்ட சிங்கப்பூரில், சுற்றுலா துறையானது வருகிற 2024-ம் ஆண்டுக்குள் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முந்தின வளர்ச்சி நிலையை அடைய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா
September 20, 2025, 10:57 am
மும்பையில் புதிய ஐபோன்களை வாங்கும்போது தள்ளுமுள்ளு
September 19, 2025, 2:49 pm
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm