செய்திகள் இந்தியா
ஹிஜாப் தடை வழக்கை விசாரிக்க விரைவில் மூன்று நீதிபதிகள் அமர்வு
புது டெல்லி:
கர்நாடக அரசு விதித்த ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.
ஏற்கெனவே 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்திருந்ததையடுத்து தற்போது 3 நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மீனாட்சி அரோரா, 'ஹிஜாப் தடையால் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளை விட்டு மாணவிகள் சென்றதால் ஓராண்டு வீணாகிவிட்டது.
பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் கர்நாடகாவில் அரசு, தனியார் கல்லூரிகளில் செயல்முறைத் தேர்வு தொடங்க உள்ளதால், மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க ஹிஜாப் தடை தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். விசாரணை தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
