
செய்திகள் இந்தியா
ஹிஜாப் தடை வழக்கை விசாரிக்க விரைவில் மூன்று நீதிபதிகள் அமர்வு
புது டெல்லி:
கர்நாடக அரசு விதித்த ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.
ஏற்கெனவே 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்திருந்ததையடுத்து தற்போது 3 நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மீனாட்சி அரோரா, 'ஹிஜாப் தடையால் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளை விட்டு மாணவிகள் சென்றதால் ஓராண்டு வீணாகிவிட்டது.
பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் கர்நாடகாவில் அரசு, தனியார் கல்லூரிகளில் செயல்முறைத் தேர்வு தொடங்க உள்ளதால், மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க ஹிஜாப் தடை தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். விசாரணை தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm
இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே முதலீடு ஒப்பந்தம்
September 9, 2025, 1:31 pm
விமான பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைத் திருடிய 15 அதிகாரிகள் நீக்கம்
September 9, 2025, 7:12 am
இன்று இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
September 8, 2025, 6:13 pm
அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தை மோடி தவிர்ப்பு
September 8, 2025, 1:23 pm