செய்திகள் இந்தியா
ஹிஜாப் தடை வழக்கை விசாரிக்க விரைவில் மூன்று நீதிபதிகள் அமர்வு
புது டெல்லி:
கர்நாடக அரசு விதித்த ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.
ஏற்கெனவே 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்திருந்ததையடுத்து தற்போது 3 நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மீனாட்சி அரோரா, 'ஹிஜாப் தடையால் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளை விட்டு மாணவிகள் சென்றதால் ஓராண்டு வீணாகிவிட்டது.
பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் கர்நாடகாவில் அரசு, தனியார் கல்லூரிகளில் செயல்முறைத் தேர்வு தொடங்க உள்ளதால், மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க ஹிஜாப் தடை தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். விசாரணை தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 5:32 pm
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இந்திய கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு
March 12, 2026, 5:30 pm
நள்ளிரவில் தீ விபத்து: டெல்லி மேற்கு பகுதியில் மீன் சந்தை தீக்கிரை
March 12, 2026, 11:03 am
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
March 12, 2026, 10:35 am
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி: துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டது
March 11, 2026, 11:47 pm
தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
March 11, 2026, 10:57 am
மேற்கு ஆசிய மோதலின் தாக்கம்: விமான எரிபொருள் கட்டணம் உயர்வு
March 10, 2026, 6:13 pm
கால்வாயில் வீசப்பட்ட ரூ.2 லட்சத்தை மீட்டுத் தந்த தீயணைப்பு வீரர்கள்
March 10, 2026, 5:11 pm
இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை: அரசிடம் விளக்கம் கோரிய எதிர்க்கட்சிகள்
March 10, 2026, 5:10 pm
திறந்த குழியில் விழுந்த இளைஞர் பலி: முக்கிய ஒப்பந்ததாரர் கைது
March 8, 2026, 1:04 pm
