
செய்திகள் இந்தியா
ஹிஜாப் தடை வழக்கை விசாரிக்க விரைவில் மூன்று நீதிபதிகள் அமர்வு
புது டெல்லி:
கர்நாடக அரசு விதித்த ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.
ஏற்கெனவே 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்திருந்ததையடுத்து தற்போது 3 நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மீனாட்சி அரோரா, 'ஹிஜாப் தடையால் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளை விட்டு மாணவிகள் சென்றதால் ஓராண்டு வீணாகிவிட்டது.
பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் கர்நாடகாவில் அரசு, தனியார் கல்லூரிகளில் செயல்முறைத் தேர்வு தொடங்க உள்ளதால், மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க ஹிஜாப் தடை தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். விசாரணை தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 10:15 pm
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
October 8, 2025, 4:39 pm
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பிக்கு வாள் வெட்டு
October 6, 2025, 9:11 pm