
செய்திகள் உலகம்
இலங்கையில் மார்ச் 9-இல் உள்ளூராட்சி தேர்தல்
கொழும்பு:
இலங்கையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியால் 6 மாதங்களுக்கு இந்தத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்த 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியை இலங்கை அரசு கையாண்டு வருவதற்கு மக்களிடம் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்த இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
எனினும், தேர்தல் நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவாகும் என்பதால் பொருளாதார நெருக்கடி நிலையை இது மேலும் மோசமாக்கும் என்று அரசு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், மார்ச் 9-ஆம் தேதி உள்ளாட்சி கவுன்சில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.
கடந்த 2018-இல் நடைபெற்ற முந்தைய உள்ளாட்சி கவுன்சில் தேர்தலில் ஆளும் இலங்கை பொதுஜனா பெரமுனா கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது.
இந்த உள்ளாட்சி கவுன்சில் தேர்தலை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 2, 2023, 2:23 pm
ஈரானில் இளம் ஜோடி தெருவில் கட்டிப்பிடித்து நடனம்; வைரலான வீடியோ: 10 வருடம் சிறை
February 2, 2023, 2:04 pm
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி?
February 1, 2023, 12:21 am
உங்கள் டிக்கெட் உங்கள் விசா: சவுதி அரசு அறிமுகம்
January 31, 2023, 8:56 pm
ஆஸ்திரேலியா: இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
January 31, 2023, 5:50 pm
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
January 31, 2023, 1:51 pm
சீனப் புத்தாண்டு பரிசு: 61 மில்லியனை ஊழியர்களுக்கு வழங்கி மகிழ்ந்த சீன சுரங்க நிறுவனம்
January 31, 2023, 8:32 am
பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு - 100 பேர் காயம்
January 29, 2023, 8:06 pm
தென்கொரியாவில் உள் வளாகங்களில் முகக்கவசம் அணிவது கைவிடப்படுகிறது
January 29, 2023, 7:52 pm
பதிலடி தாக்குதல்கள்: இஸ்ரேல் -பாலஸ்தீனத்தில் அதிகரிக்கும் போர் பதற்றம்
January 29, 2023, 11:35 am