
செய்திகள் உலகம்
இலங்கையில் மார்ச் 9-இல் உள்ளூராட்சி தேர்தல்
கொழும்பு:
இலங்கையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியால் 6 மாதங்களுக்கு இந்தத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்த 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியை இலங்கை அரசு கையாண்டு வருவதற்கு மக்களிடம் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்த இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
எனினும், தேர்தல் நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவாகும் என்பதால் பொருளாதார நெருக்கடி நிலையை இது மேலும் மோசமாக்கும் என்று அரசு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், மார்ச் 9-ஆம் தேதி உள்ளாட்சி கவுன்சில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.
கடந்த 2018-இல் நடைபெற்ற முந்தைய உள்ளாட்சி கவுன்சில் தேர்தலில் ஆளும் இலங்கை பொதுஜனா பெரமுனா கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது.
இந்த உள்ளாட்சி கவுன்சில் தேர்தலை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm