செய்திகள் உலகம்
இலங்கையில் மார்ச் 9-இல் உள்ளூராட்சி தேர்தல்
கொழும்பு:
இலங்கையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியால் 6 மாதங்களுக்கு இந்தத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்த 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியை இலங்கை அரசு கையாண்டு வருவதற்கு மக்களிடம் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்த இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
எனினும், தேர்தல் நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவாகும் என்பதால் பொருளாதார நெருக்கடி நிலையை இது மேலும் மோசமாக்கும் என்று அரசு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், மார்ச் 9-ஆம் தேதி உள்ளாட்சி கவுன்சில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.
கடந்த 2018-இல் நடைபெற்ற முந்தைய உள்ளாட்சி கவுன்சில் தேர்தலில் ஆளும் இலங்கை பொதுஜனா பெரமுனா கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது.
இந்த உள்ளாட்சி கவுன்சில் தேர்தலை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 8:55 pm
Kalmaegi சூறாவளி: பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
