
செய்திகள் உலகம்
இலங்கையில் மார்ச் 9-இல் உள்ளூராட்சி தேர்தல்
கொழும்பு:
இலங்கையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியால் 6 மாதங்களுக்கு இந்தத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்த 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியை இலங்கை அரசு கையாண்டு வருவதற்கு மக்களிடம் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்த இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
எனினும், தேர்தல் நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவாகும் என்பதால் பொருளாதார நெருக்கடி நிலையை இது மேலும் மோசமாக்கும் என்று அரசு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், மார்ச் 9-ஆம் தேதி உள்ளாட்சி கவுன்சில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.
கடந்த 2018-இல் நடைபெற்ற முந்தைய உள்ளாட்சி கவுன்சில் தேர்தலில் ஆளும் இலங்கை பொதுஜனா பெரமுனா கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது.
இந்த உள்ளாட்சி கவுன்சில் தேர்தலை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 3:50 pm
காசாவில் பாலஸ்தீனர்கள் பலி 15,000ஐக் கடந்தது
December 3, 2023, 3:44 pm
வேகமாக உருகும் இமயமலை: உதவ ஐ.நா. வலியுறுத்தல்
December 3, 2023, 6:52 am
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு மீட்கப்பட்டுள்ளது
December 2, 2023, 4:44 pm
காசாவில் மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
December 2, 2023, 1:18 pm
தென் சீனக் கடல் தீவில் புதிய கண்காணிப்பு நிலையம்
December 2, 2023, 12:12 pm
நித்யானந்தாவின் கைலாசா நாட்டுடன் கையெழுத்திட்ட பராகுவே அமைச்சின் உயரதிகாரி நீக்கம்
November 30, 2023, 12:25 pm
சர்ச்சைக்குரிய அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸ்ஸிங்கர் காலமானார்
November 30, 2023, 11:36 am
50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலாவுக்குச் செல்லும் அமெரிக்கா
November 30, 2023, 10:45 am