செய்திகள் வணிகம்
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு புதிய விதிமுறை ஒரு சுமை: டத்தோ ஸ்ரீ ஜெயந்திரன்
கிள்ளான்:
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் ஒரு சுமை என்று மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் கூறினார்.
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கான முகவர்கள் முன்கூட்டியே உறுதி கடிங்களுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அதே வேளையில் மாலுமிகளின் கடப்பிதழ், கடல் பயணப் புத்தகங்கள் ஆகியவற்றுக்கு சத்தியப் பிரமாண அதிகாரிகளின் கையெழுத்து வாங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில குடிநுழைவு இலாகா புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து உள்ளது.
இதுபோன்ற விதிமுறைகள் என்னை போன்ற கடற்சார் தொழில் துறையை சேர்ந்தவர்களுக்கு மேலும் சுமையை தான் ஏற்ப்படுத்தும் என்று டத்தோஸ்ரீ ஜெயந்திரன் கூறினார்.
கப்பல் துறைமுகத்திற்கு வருவதற்கு முன்னதாகவே மாலுமிகளின் விவரங்களுக்கு எப்படி அனுமதி பெறுவது தான் என்னுடை கேள்வியாக உள்ளது.
இதுபோன்ற விதிமுறைகள் நடைமுறைக்கு ஏற்புடையதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த 30 ஆண்டுகளாக இத் துறையில் நான் ஈடுப்பட்டு வருகிறேன். இதற்கு முன் இதுபோன்ற பிரச்சினைகளை நாங்கள் எதிர்நோக்கியது இல்லை.
ஆகையால், இந்த விவகாரத்திற்கு சம்பந்தப்பட்ட இலாகா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 10:45 am
எண்ணெய் விலை உயர்வு எச்சரிக்கை: உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்
March 12, 2026, 12:21 pm
எண்ணெய் விலை நிலைத்ததைத் தொடர்ந்து ரிங்கிட் தொடர்ந்து உயர்வு
March 12, 2026, 11:21 am
இராணுவ நிதியத்தின் வலுவான செயல்திறன்: 5.35% லாபப் பங்கு வழங்கல்
March 11, 2026, 11:57 am
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முடிவுக்கு வந்த எம்.பி.ஓ திரைப்பட நிறுவனம்
March 10, 2026, 3:46 pm
போர்ப்பதற்றத்தின் தாக்கம்: செம்பனை எண்ணெயின் விலை 10% உயர்வு
March 10, 2026, 10:15 am
ஈரான், அமெரிக்க பதற்றத்தின் மத்தியில் ரிங்கிட் வலுவான தொடக்கம்
March 9, 2026, 2:00 pm
வரலாறு காணாத உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை
March 6, 2026, 11:24 am
மலேசிய வரலாற்றில் மிக உயர்ந்த முதலீடு: கடந்த ஆண்டு 426.7 பில்லியன் பதிவு
March 5, 2026, 4:14 pm
