
செய்திகள் வணிகம்
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு புதிய விதிமுறை ஒரு சுமை: டத்தோ ஸ்ரீ ஜெயந்திரன்
கிள்ளான்:
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் ஒரு சுமை என்று மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் கூறினார்.
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கான முகவர்கள் முன்கூட்டியே உறுதி கடிங்களுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அதே வேளையில் மாலுமிகளின் கடப்பிதழ், கடல் பயணப் புத்தகங்கள் ஆகியவற்றுக்கு சத்தியப் பிரமாண அதிகாரிகளின் கையெழுத்து வாங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில குடிநுழைவு இலாகா புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து உள்ளது.
இதுபோன்ற விதிமுறைகள் என்னை போன்ற கடற்சார் தொழில் துறையை சேர்ந்தவர்களுக்கு மேலும் சுமையை தான் ஏற்ப்படுத்தும் என்று டத்தோஸ்ரீ ஜெயந்திரன் கூறினார்.
கப்பல் துறைமுகத்திற்கு வருவதற்கு முன்னதாகவே மாலுமிகளின் விவரங்களுக்கு எப்படி அனுமதி பெறுவது தான் என்னுடை கேள்வியாக உள்ளது.
இதுபோன்ற விதிமுறைகள் நடைமுறைக்கு ஏற்புடையதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த 30 ஆண்டுகளாக இத் துறையில் நான் ஈடுப்பட்டு வருகிறேன். இதற்கு முன் இதுபோன்ற பிரச்சினைகளை நாங்கள் எதிர்நோக்கியது இல்லை.
ஆகையால், இந்த விவகாரத்திற்கு சம்பந்தப்பட்ட இலாகா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 2, 2023, 2:56 pm
அதானியைப் பின்னுக்கு தள்ளினார் அம்பானி
January 30, 2023, 2:31 pm
துபாய் அனைத்துலக பொருளாதார மாநாடு உலக வர்த்தகர்களை ஒன்றிணைக்கும்
January 30, 2023, 12:01 pm
48 மணி நேரத்தில் 51 பில்லியன் டாலர் இழப்பு: சரியும் கோடீஸ்வரர் அதானியில் சாம்ராஜியம்
January 28, 2023, 5:23 pm
சிங்கப்பூரின் முஸ்தஃபா சென்டர் விரைவில் ஜொகூரில் புதிய பொலிவுடன் துவங்குகிறது
January 28, 2023, 11:13 am
அதானியின் சரிந்த நிறுவனங்களில் எல்ஐசி, எஸ்பிஐ முதலீடு: விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
January 25, 2023, 2:38 pm
ஜி.எஸ்.டி நாட்டின் கடன் சுமையைக் குறைக்க உதவும்
January 24, 2023, 6:23 pm
உலகின் மதிப்புமிக்க நிறுவனம் அமேசானுக்கு முதலிடம்
January 24, 2023, 3:41 pm
2024க்குள் சிங்கப்பூர் சுற்றுலா துறை கொரோனாவுக்கு முந்தின வளர்ச்சி நிலையை அடையும்
January 20, 2023, 6:31 pm