செய்திகள் வணிகம்
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு புதிய விதிமுறை ஒரு சுமை: டத்தோ ஸ்ரீ ஜெயந்திரன்
கிள்ளான்:
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் ஒரு சுமை என்று மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் கூறினார்.
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கான முகவர்கள் முன்கூட்டியே உறுதி கடிங்களுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அதே வேளையில் மாலுமிகளின் கடப்பிதழ், கடல் பயணப் புத்தகங்கள் ஆகியவற்றுக்கு சத்தியப் பிரமாண அதிகாரிகளின் கையெழுத்து வாங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில குடிநுழைவு இலாகா புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து உள்ளது.
இதுபோன்ற விதிமுறைகள் என்னை போன்ற கடற்சார் தொழில் துறையை சேர்ந்தவர்களுக்கு மேலும் சுமையை தான் ஏற்ப்படுத்தும் என்று டத்தோஸ்ரீ ஜெயந்திரன் கூறினார்.
கப்பல் துறைமுகத்திற்கு வருவதற்கு முன்னதாகவே மாலுமிகளின் விவரங்களுக்கு எப்படி அனுமதி பெறுவது தான் என்னுடை கேள்வியாக உள்ளது.
இதுபோன்ற விதிமுறைகள் நடைமுறைக்கு ஏற்புடையதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த 30 ஆண்டுகளாக இத் துறையில் நான் ஈடுப்பட்டு வருகிறேன். இதற்கு முன் இதுபோன்ற பிரச்சினைகளை நாங்கள் எதிர்நோக்கியது இல்லை.
ஆகையால், இந்த விவகாரத்திற்கு சம்பந்தப்பட்ட இலாகா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
