
செய்திகள் மலேசியா
நூறு கிலோ போதைப் பொருள் கடத்தல்: அண்மையில் குழந்தை பெற்ற இளம் தாய், கணவர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
அண்மையில் குழந்தை பெற்றெடுத்த பெண், அவரது கணவர் மற்றும் 21 வயது இளைஞர் ஆகிய மூன்று பேர் மீதும் நூறு கிலோ போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு செராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
21 வயதான Gan Pei Hong, 31 வயதான அவரது கணவர் Cha Wee Sang, Yap Yau Yang ஆகிய மூவரும் கடந்த 5ஆம் தேதி தாமான் சேகரில் இந்த குற்றத்தைப் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
அன்றைய தினமே தாமான் புக்கிட் ஹிஜாவ் பகுதியில் 98.4 கிலோ ஹராயின் சார்ந்த போதைப் பொருட்களைக் கடத்தியதாக மற்றொரு குற்றச்சாட்டையும் Yap Yau Yang எதிர்கொண்டுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முறையீடு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. போதைப்பொருள் கடத்தலுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை அல்லது 30 ஆண்டு கால ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
அண்மையில்தான் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் என்பதை கருத்தில் கொண்டு Gan Pei Hongக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாய்மொழியாக விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தார் மாஜிஸ்திரேட். எனினும் Gan Pei Hongஐ மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 10:19 pm
கூடுதல் உத்தரவு தொடர்பில் முன்னாள் ஏஜிக்கு எதிராக நஜிப் போலிஸ் புகார் செய்தார்
June 16, 2025, 10:10 pm
அன்வாருக்கு எதிரான யூசோஃப் ராவுத்தரின் வழக்கு மேலாண்மை செப்டம்பர் 30இல் நடைபெறும்
June 16, 2025, 10:06 pm
நெடுஞ்சாலை நிதி மோசடி: டான்ஸ்ரீயின் வாக்குமூலம் வியாழக்கிழமை பதிவு செய்யப்படும்: அசாம் பாக்கி
June 16, 2025, 10:06 pm
ஈரான் - இஸ்ரேல் மோதலால் வர்த்தக வழிகள் தடுக்கப்படலாம் என்ற கவலைகள் உள்ளன: பிரதமர்
June 16, 2025, 4:50 pm
RON95 எரிபொருள் மானியத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்: பிரதமர் அன்வார்
June 16, 2025, 4:35 pm
எனது தந்தையின் உடல்நலனுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்: டான்ஸ்ரீ ஹாடி அவாங் மகன் வேண்டுகோள்
June 16, 2025, 4:32 pm