செய்திகள் மலேசியா
தடுப்பூசிகளால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை: சுகாதார அமைச்சு
கோலாலம்பூர்:
தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நாட்டில் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
ஆயிரம் பேரில் 2.4 பக்க விளைவு சம்பவங்கள் மட்டுமே பதிவாகி உள்ளன என்றும் தீவிர பக்க விளைவுகள் காரணமாக மருத்துவமனையில் 0.09 விழுக்காட்டினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் ஜூன் 12ஆம் தேதி வரை சுமார் 4.7 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு தலைவலி, சோர்வு, ஊசி போட்ட இடத்தில் லேசான தடிமன் போன்ற பொதுவான பக்க விளைவுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
"0.09 விழுக்காட்டினருக்கு மட்டுமே அதிக பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலும் பலர் உரிய சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்குப் பிறகு விரைவாக வீடு திரும்பியுள்ளனர்," என்று சுகாதார அமைச்சர் ஆதம்பாபா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 10:08 pm
கனமழையை தொடர்ந்து தலைநகரில் திடீர் வெள்ளம்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
