
செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது: ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை
ஜகர்த்தா:
இந்தோனேசியாவின் ஜாவா மாநிலத்தில் உள்ள ஆக உயரமான செமெரு (Semeru) எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
அந்நாட்டு எரிமலை குறித்த விழிப்புநிலையை அதிகாரிகள் உச்சத்துக்கு உயர்த்தியுள்ளனர்.
எரிமலை சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பலையும் புகையையும் கக்கியதை அடுத்து, அண்டை கிராமங்களில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
எரிமலை பகுதியிலிருந்து குறைந்தது 8 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் யாரும் செல்லவேண்டாம் என்று குடியிருப்பாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் ஜப்பானில் சுனாமி ஏற்படக்கூடிய அபாயம் எழுந்துள்ளது.
ஆக்கினாவா (Okinawa) பகுதியில் உள்ள மியாக்கோ (Miyako), யேயாமா (Yaeyama) தீவுகளில் சுனாமி ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் Kyodo செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஆண்டிறுதியில், செமெரு எரிமலை வெடித்தபோது, குறைந்தது 51 பேர் மாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-AFP
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am