
செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது: ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை
ஜகர்த்தா:
இந்தோனேசியாவின் ஜாவா மாநிலத்தில் உள்ள ஆக உயரமான செமெரு (Semeru) எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
அந்நாட்டு எரிமலை குறித்த விழிப்புநிலையை அதிகாரிகள் உச்சத்துக்கு உயர்த்தியுள்ளனர்.
எரிமலை சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பலையும் புகையையும் கக்கியதை அடுத்து, அண்டை கிராமங்களில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
எரிமலை பகுதியிலிருந்து குறைந்தது 8 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் யாரும் செல்லவேண்டாம் என்று குடியிருப்பாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் ஜப்பானில் சுனாமி ஏற்படக்கூடிய அபாயம் எழுந்துள்ளது.
ஆக்கினாவா (Okinawa) பகுதியில் உள்ள மியாக்கோ (Miyako), யேயாமா (Yaeyama) தீவுகளில் சுனாமி ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் Kyodo செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஆண்டிறுதியில், செமெரு எரிமலை வெடித்தபோது, குறைந்தது 51 பேர் மாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-AFP
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm
நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்
September 11, 2025, 12:42 pm