நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் இன்று கொரொனா தொற்று நோயாளிகள் 4949; சிலாங்கூர் 1523

கோலாலம்பூர்:

மலேசியாவில் இன்று புதிதாக 4,949 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,523 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் இடத்தில் இன்றும் சரவாக் உள்ளது. அங்கு மட்டும் 744 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

கோலாலம்பூர் 503 பேரும் ஜொகூரில் 430 பேரும், நெகிரி செம்பிலானில் 323 பேரும் சபாவில் 273 பேரும் கிளந்தானில் 214 பேரும் லாபுவானில் 113 பேரும் பினாங்கில் 214 பேரும் கெடாவில் 199 பேரும் பேராக்கில் 136 பேரும் மலாக்காவில் 119 பேரும் பஹாங்கில் 61 பேரும் புத்ராஜெயாவில் 10 பேரும்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset