செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 3,537 பேர் பாதிப்பு; 8 பேர் பலி: சுகாதாரத்துறை
புத்ராஜெயா:
நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 3,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,975,473 ஆக அதிகரித்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 1,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் 290, சபாவில் 254, சரவாக்கில் 220, மலாக்காவில் 205, கிளந்தானில் 202, கெடாவில் 200, பினாங்கில் 180, பேராக்கில் 145, பகாங்கில் 135, நெகிரி செம்பிலானில் 114, புத்ராஜெயாவில் 107, திரெங்கானுவில் 103, ஜொகூரில் 58, லாபுவானில் 35, பெர்லிசில் 9 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,978 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 101 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிலாங்கூரில் 200, சபாவில் 115, ஜொகூரில் 71 பேரும் சிகிச்சை பெறுகின்றனர் என்று சுகாதாரத்துறை கூறியது.
தொற்றுக்கு 8 பேர் பலி
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 8 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,628 ஆக அதிகரித்துள்ளது.
8 மரண சம்பவங்களில் ஒருவர் மருத்துவமனை சிகிச்சைக்கு முன்னதாகவே இறந்துள்ளார்.
இம்மாதம் மட்டும் இதுவரை 153 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
கடந்த மாதம் 101 பேரும் செப்டம்பரில் 158 பேரும் இறந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
April 24, 2024, 10:50 am
24 மணி நேர உணவக உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தை சுகாதார அமைச்சு ஆராயும்: ஜுல்கிஃளி அஹ்மத்
April 24, 2024, 10:19 am
பழங்குடி மாணவர்களிடையே ஆங்கிலப் புலமை திருப்திகரமாகவுள்ளது: கல்வியமைச்சர்
April 24, 2024, 9:46 am
தேசியக் கூட்டணி இனவாத கூட்டணி என்ற அடையாளத்தை மலேசிய இந்திய மக்கள் கட்சி அழிக்கும்: கானா
April 24, 2024, 9:35 am
சிவசுதன் மரணச் செய்தி கேட்டு குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் நடுங்கினர்: சிவநேசன்
April 23, 2024, 6:54 pm
24 மணி நேர உணவக உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தை பிரெஸ்மா நிராகரிக்கிறது: டத்தோ ஜவஹர் அலி
April 23, 2024, 6:53 pm
இது மசீசவின் மானப் பிரச்சினை; தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவ மாட்டோம்: வீ கா சியோங்
April 23, 2024, 6:52 pm
ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களுக்கு சிறப்பு உதவி பிரதமர் அறிவிப்பார்: ஃபாடிலா
April 23, 2024, 6:15 pm
வாக்களிப்பது நமது உரிமை; யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது: கணபதி ராவ்
April 23, 2024, 6:11 pm
ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம், மஹிமாவின் திருவிளங்கு சைவத் திருமுறை மாநாடு
April 23, 2024, 5:40 pm