![image](https://imgs.nambikkai.com.my/Flood-0e143.jpg)
செய்திகள் மலேசியா
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆயுதப்படை, ரேலாவின் உதவி கோரப்படும்: உள்துறை அமைச்சர்
கோலாலம்பூர்:
எதிர்வரும் பொதுத்தேர்தல் சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஸைனுடின் தெரிவித்துள்ளார்.
மேலும் ரேலா படையினரும், ஆயுதப்படையினரும் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
குறிப்பாக வெள்ளப்பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் இவர்கள் களமிறக்கப்படுவர் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
"பெரும்பாலான காவல்துறையினர் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். எனவே ரேலா, ஆயுதப் படையினரின் சேவை தேவைப்படுகிறது.
"உள்துறை அமைச்சைப் பொறுத்தவரையில் சுமார் 80 ஆயிரம் பேர், தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. எனினும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் கூடுதல் எண்ணிக்கையிலானவர்கள் தேவைப்படுவர்.
"எனவேதான் ரேலா படையின் உதவியைக் கோரியுள்ளோம். அந்த எண்ணிக்கையும் போதுமானதாக இல்லையெனில் ராணுவத்தையும், பிற முகமைகளையும் உதவிக்கு அழைப்போம்.
"பருவ மழைக்காலம் என்பதால் வெள்ளப்பெருக்கு என்பதே இப்போது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. வெள்ளப்பெருக்கின்போது வாக்களிக்க வேண்டும் என்றால் வாக்காளர்கள் அதிருப்தி அடைவர். இச் சமயம் பொதுமக்களின், குறிப்பாக வாக்காளர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்," என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஸைனுடின் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
February 11, 2025, 1:13 pm
தைப்பூச விழாவில் மற்ற இன மக்கள் கலந்து கொள்வதால் அவர்கள் இந்துவாக மாறி விட மாட்டார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
February 11, 2025, 12:52 pm
பத்துமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியர் கலாச்சார் மையம் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சாதனை: பிஎன் ரெட்டி
February 11, 2025, 12:32 pm
வெள்ளத் தணிப்புத் திட்டம் தொடர்ந்து தாமதமானால் அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும்: துவான் இப்ராஹிம்
February 11, 2025, 12:12 pm
சபா, சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,062 பேர் இன்னும் நிவாரண மையங்களில் உள்ளனர்
February 11, 2025, 12:05 pm
பேரங்காடியில் பிள்ளையை அறைந்த வீடியோவில் சிக்கிய பெண் கைது
February 11, 2025, 11:05 am
பினாங்கு தைப்பூச இரத ஊர்வலத்தில் முருக பக்தர்களோடு இலக்கவியல் அமைச்சர்
February 11, 2025, 10:07 am
பத்துமலையில் தைப்பூச உற்சவம்: பக்தி பரவசத்தில் பன்னாட்டு பக்தர்கள்
February 11, 2025, 12:10 am
சிலாங்கூர் மாநிலத்தில் அனைத்து இன மக்களின் சமயம், கலை, கலாச்சாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்படும்: அமிரூடின் ஷாரி
February 11, 2025, 12:09 am