நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பூச விழாவில் மற்ற இன மக்கள் கலந்து கொள்வதால் அவர்கள் இந்துவாக மாறி விட மாட்டார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்

பத்துமலை:

தைப்பூச விழாவில் மற்ற இன மக்கள் கலந்து கொள்வதால் அவர்கள் இந்துவாக மாறி விட மாட்டார்கள்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

நாடு தழுவிய நிலையில் தைப்பூச விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தைப்பூசம் ஒரு சமய விழாவாக இருந்தாலும் அனைத்து இன மக்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்விழாவில் கலந்து கொள்வதால் அவர்கள் இந்துவாக மாறிவிட மாட்டார்கள். காரணம் அவரவருக்கென சமய நம்பிக்கை உள்ளது. இதை யாராலும் மாற்ற முடியாது.

பத்துமலை தைப்பூச விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ சரவணன் இதனை வலியுறுத்தினார்.

பத்துமலையில் பல அபிவிருத்திகளை மேற்கொண்டு இன்று உலக பிரசித்தி தளமாக திருப்பணி செம்மல் டான்ஸ்ரீ நடராஜா உருவாக்கி உள்ளார். அதே வேளையில் பத்துமலை பக்திமலையாகவும் அவர் உருவாக்கி உள்ளார்.

அவரின் திருப்பணிகள்  தொடர முருகப் பெருமான் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset