ஒரு மனிதரிடமிருந்து வெளிப்படும் நீர்த்திவலைகள், அதிகபட்சமாக 24 அடிக்குக்கூடச் (8 மீட்டர்) செல்லக்கூடும்.
இருந்தாலும் பல்வேறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், 6 அடி (2 மீட்டர்) சமூக இடை வெளியைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.
கூட்டத்திற்குள் செல்ல வேண்டாம். நீங்கள் அத்தகைய இடத்திற்குச் சென்றால், எதையும் தொடுவதைத் தவிர்க்கவும். இதுபோன்ற எல்லா இடங்களிலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மிக முக்கியமான விஷயமாக வழிகாட்டுதலில் சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால், நீங்கள் சானிட்டீசரை (Hand Sanitizer) கைகளில் தேய்த்துக் கொண்டால், கொரோனா வைரஸ் (Coronavirus) இறக்காது.
சானிட்டீசரைப் பயன்படுத்தும்போது, கைகளை 30 விநாடிகள் தேய்க்க வேண்டும்.
வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு வாய் மற்றும் மூக்கை நன்றாக மூடும் வகையில் மாஸ்க் (Face Mask) அணிய வேண்டும்.நல்ல உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
உங்கள் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவை உள்ளடக்குங்கள்.
இந்த நோயைத் தவிர்க்க, உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிக முக்கியம்.
ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். இது தவிர, வெளியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் சோப்பு (Soap) மற்றும் ஹேண்ட்வாஷ் உதவியுடன் கைகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.