
செய்திகள் வணிகம்
முக்கிய பொறுப்பு வகித்த 200 இந்தியர்கள் உட்பட 50% ஊழியர்கள் பணிநீக்கம்: டிவிட்டர் அதிரடி
நியூயார்க்:
டிவிட்டரில் பணியாற்றும் 7,500 பணியாளர்களில் 50 சதவீதத்தினரை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தை கடந்த வாரம் வாங்கிய உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலான் மஸ்க் இந்த நடவடிக்கையை தொடங்கி உள்ளார்.
இந்தியாவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பணியாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு வெளியாக வருவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ட்விட்டரின் நிதிநிலையை வலுவான பாதைக்கு கொண்டு செல்ல, பணி நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அனைத்து அலுவலகங்களும் பணியாளர்களின் பாதுகாப்புக்காக தற்காலிகமாக மூடப்படுகின்றன.
அலுவலகங்களுக்கு வந்துவிட்ட பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். அலுவலகத்துக்குப் புறப்படவுள்ள பணியாளர்கள் அலுவலகம் வர வேண்டாம்.
அனைத்துப் பணியாளர்களுக்கும் மின்னஞ்சல் வழியாக அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்படும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
200க்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றம் துறைகளில் பணியாற்றிய அனைவரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து இயங்குபவர்கள் என்றும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am