
செய்திகள் மலேசியா
நாடு முழுவதும் ICU-வில் 905 பேர் அனுமதி: சுகாதார அமைச்சு தகவல்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போது 905 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 453 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மே 28ஆம் தேதி நாடு முழுவதும் 808 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் இன்று வரை நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தபடியே இருந்து இன்று 905 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே நாட்டின் சுகாதார கட்டமைப்பு கடும் அழுத்தங்களைச் சந்தித்து வருவதாக அதன் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் கூறிவந்தார்.
குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார். அதற்கேற்ப தினந்தோறும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm