
செய்திகள் இந்தியா
உ.பி.யில் ஆசிரியரால் தாக்கப்பட்டு தலித் மாணவர் சாவு
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்ட 15 வயது தலித் மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் ஒளரையாவில் 10ஆம் வகுப்பு படித்து வந்தவர் நிகில் குமார். தலித் மாணவரான இவர், பரிசோதனை முறையில் நடத்தப்பட்ட சமூக அறிவியல் தேர்வில் தவறு செய்துள்ளார்.
இதனால் அவரின் சமூக அறிவியல் ஆசிரியர் அஸ்வினி சிங், நிகில் குமாரை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.
கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் மாணவர் பலத்த காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், அவர் உடல்நிலையில் முன்னேற்றமின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து நிகில் குமார் படித்த பள்ளி முன்பாக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரும், காவல் துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் காவல் துறை வாகனத்துக்குத் தீ வைத்த போராட்டக்காரர்கள், மாவட்ட ஆட்சியரின் காரையும் சேதப்படுத்தினர். அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாரு நிகம் சென்ற பின்னர், நிலைமை கட்டுக்குள் வந்தது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm