செய்திகள் இந்தியா
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
புதுடெல்லி:
ரயில் கட்டண உயா்வு இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது
ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்கள், அதே பயணச்சீட்டில் பயணிக்கலாம். அவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
215 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் சாதாரண வகுப்புக்கு ஒரு காசு, விரைவு/மெயில் ரயில்களில் குளிா்சாதன வசதி கொண்ட வகுப்புகளுக்கு 2 காசு கட்டணத்தை உயா்த்தி ரயில்வே அமைச்சகம் கடந்த டிச. 21-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இந்தக் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது. அதன்படி, 215 கி.மீ. வரை பயணம் செய்ய கட்டண உயா்வு இல்லை. 215 கி.மீ.லிருந்து 750 கி.மீ. தொலைவு வரை கட்டணம் ரூ.5 உயா்த்தப்பட்டுள்ளது. 751 கி.மீ. தொலைவிலிருந்து 1250 கி.மீ. வரை ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் பொதுமக்கள் அறியும் வகையில் திருத்தப்பட்ட கட்டண அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
