
செய்திகள் இந்தியா
போலி செய்திகள் பரப்பியதாக 8 யூடியூப் சேனல்களுக்கு இந்தியா தடை
புது டெல்லி:
இந்தியாவுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்விதமாக போலியான செய்திகளைப் பரப்பிய 8 யூடியூப் சேனல்களுக்கு அரசு தடை விதித்தது.
தடை செய்யப்பட்ட இந்திய யூடியூப் சேனல்கள் பிரபல தொலைக்காட்சி சேனல்களின் லோகோ, செய்தி வாசிப்பாளர்களின் புகைப்படத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி, போலிச் செய்திகளைப் பரப்பி பார்வையாளர்களை நம்ப வைத்துள்ளனர்.
மேலும், அரசால் மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதாகவும், திருவிழா கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்படுவதாகவும், நாட்டில் மத மோதல் நடைபெறுவதாகவும் போலிச் செய்திகளைப் பரப்பியுள்ளனர்.
இதுபோன்ற செய்திகள் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், அந்த சேனல்களின் மீது தடை விதிக்கப்பட்டது.
இந்த 8 சேனல்களும் கூட்டாக 114 கோடி பார்வையாளர்களையும், 85.73 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 4:04 pm
அழிவுப் பாதையில் ரயில்வே: மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
December 3, 2023, 12:42 pm
மத்தியப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி முந்துகிறது
December 3, 2023, 12:29 pm
தேர்தல்: தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை - சந்திரசேகர ராவ் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பின்னடைவு
December 3, 2023, 7:55 am
4 மாநில தேர்தல் முடிவு இன்று வெளியாகிறது
December 2, 2023, 3:48 pm
தேசிய கீதம் அவமதிப்பு: 11 பாஜக எம்எல்ஏக்கள் மீது வழக்கு
December 2, 2023, 3:08 pm
இந்தியாவில் சிம் கார்டு வாங்க புதிய விதிமுறைகள்: மீறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
December 2, 2023, 2:21 pm
பள்ளிவாசல் பாங்கு ஓசையைவிட கோயில் பஜனைகளில் அதிக சத்தம்: குஜராத் உயர்நீதிமன்றம்
December 2, 2023, 12:34 pm
5 மாநில தேர்தல்களில் ரூ.1,766 கோடிக்கு பணம் பொருள்கள் பறிமுதல்
December 1, 2023, 6:02 pm