செய்திகள் இந்தியா
சகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பெயர் சேர்ப்பு
புது டெல்லி:
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கில், தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஹிந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாகம் சாரா துணைத் தலைவராகவும் இருந்த ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களிடம் பல கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், அவரின் மனைவி லீனா மரியா பால் உள்பட 8 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
பணம் பறிப்பு உள்பட பல்வேறு குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தில் ஹிந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு சுகேஷ் சந்திரசேகர் பரிசுகள் வழங்கியுள்ளார்.
அந்தப் பரிசுகளின் மதிப்பு ரூ.5.71 கோடி. அத்துடன் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் இணையவழி தொடருக்கு கதை எழுத அவரது சார்பாக எழுத்தாளர் ஒருவருக்கு ரூ.15 லட்சத்தை முன்பணமாக சுகேஷ் சந்திரசேகர் அளித்துள்ளார்.
இதுமட்டுமின்றி ஜாக்குலினின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு 1,72,913 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.1.3 கோடி), 26,740 ஆஸ்திரேலிய டாலர்களை (சுமார் ரூ.14 லட்சம்) ஹவாலா மோசடியாளர் மூலம் சுகேஷ் வழங்கியுள்ளார்.
சுகேஷிடம் இருந்து பரிசுகள் பெற்றதாக ஜாக்குலின் வாக்குமூலம் அளித்தார் ..
கடந்த ஏப்ரல் மாதம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாக்குலினுக்குச் சொந்தமான ரூ.7.12 கோடி வைப்புத் தொகை, ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்கியது.
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:21 pm
சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
November 4, 2025, 4:55 pm
அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் கடன் வாங்கி ஏமாற்றிய இந்திய வம்சாவளி சிஇஓ
November 2, 2025, 1:29 pm
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
November 2, 2025, 11:55 am
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
