
செய்திகள் இந்தியா
சகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பெயர் சேர்ப்பு
புது டெல்லி:
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கில், தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஹிந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாகம் சாரா துணைத் தலைவராகவும் இருந்த ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களிடம் பல கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், அவரின் மனைவி லீனா மரியா பால் உள்பட 8 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
பணம் பறிப்பு உள்பட பல்வேறு குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தில் ஹிந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு சுகேஷ் சந்திரசேகர் பரிசுகள் வழங்கியுள்ளார்.
அந்தப் பரிசுகளின் மதிப்பு ரூ.5.71 கோடி. அத்துடன் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் இணையவழி தொடருக்கு கதை எழுத அவரது சார்பாக எழுத்தாளர் ஒருவருக்கு ரூ.15 லட்சத்தை முன்பணமாக சுகேஷ் சந்திரசேகர் அளித்துள்ளார்.
இதுமட்டுமின்றி ஜாக்குலினின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு 1,72,913 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.1.3 கோடி), 26,740 ஆஸ்திரேலிய டாலர்களை (சுமார் ரூ.14 லட்சம்) ஹவாலா மோசடியாளர் மூலம் சுகேஷ் வழங்கியுள்ளார்.
சுகேஷிடம் இருந்து பரிசுகள் பெற்றதாக ஜாக்குலின் வாக்குமூலம் அளித்தார் ..
கடந்த ஏப்ரல் மாதம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாக்குலினுக்குச் சொந்தமான ரூ.7.12 கோடி வைப்புத் தொகை, ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்கியது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm