
செய்திகள் தொழில்நுட்பம்
இந்தியாவில் 5ஜி ஏலம் முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடி
புது டெல்லி:
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கி முதல நாளில் ரூ. 1.45 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளன.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கௌதம் அதானியின் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன.
"முதல் நாளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்குவதற்கு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
இதன் மதிப்பு ரூ.1.45 லட்சம் கோடியாகும். இது 2015இல் படைத்த வரலாற்றையும் இந்த ஏலம் முறியடித்துள்ளது என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்த ஏலத்தில் பங்கேற்க செலுத்த வேண்டிய முன்பண வைப்பு (இஎம்டி) தொகையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.14,000 கோடியை செலுத்தியுள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ. 5,500 கோடியும், வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ. 2,200 கோடியும் இஎம்டி செலுத்தியுள்ளன. அதே நேரம், அதானி நிறுவனம் ரூ. 100 கோடி அளவில் மட்டுமே செலத்தியுள்ளது.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே முன்னணியில் இருக்கும் எனத் தெரிகிறது.
5ஜி ஏலம் புதன்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 14க்குள் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு செப்டம்பரில் இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
June 6, 2023, 11:27 am
15 இன்ச் மேக்புக் ஏர் அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்
June 2, 2023, 1:43 am
சவூதி அரேபிய விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்
May 22, 2023, 11:20 pm
வாட்ஸ் அப்பில் தகவலைத் திருத்தம் செய்யும் அம்சம் அறிமுகம்
May 22, 2023, 9:59 am
இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது
May 16, 2023, 1:06 pm
வாட்ஸ்ஆப்பில் இனி CHAT LOCK செய்யலாம்: மெட்டா நிறுவனம் அறிவிப்பு
May 11, 2023, 11:11 am
AI தொழில்நுட்பம் கொண்டு நொடிப்பொழுதில் அகப்பக்கத்தை உருவாக்கலாம்.
May 3, 2023, 3:40 pm
விமானம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்: ஏர்ஆசியா விளக்கம்
April 26, 2023, 6:27 pm
ஸ்வீடனின் ஆராய்ச்சி ஏவுகணை தவறுதலாக நார்வேவைத் தாக்கியது
April 21, 2023, 1:19 pm
விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்
April 18, 2023, 12:39 pm