நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

AI-ஐக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை

நியூயார்க்:

செயற்கை நுண்ணறிவைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்று அல்ஃபபெட் (Alphabet) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

"AI கருவிகள் சில நேரங்களில் தவறான தகவலைத் தரலாம்; அதனால் மற்ற வழிகள் மூலம் தகவல்களைச் சரிபார்க்கும்படி அவர் வலியுறுத்தினார்.

கூகலின் தேடல் தளமும் மற்ற மென்பொருள்களும் துல்லியமான தகவல்களை வழங்கும் வகையில் நிர்வகிக்கப்படுவதால் அவற்றைப் பலர் பயன்படுத்துகின்றனர் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இருப்பினும் நிறுவனம் அதன் AI தளத் தேடல் முடிவுகளில் பிழை இருக்கலாம் எனும் அறிவிப்பையும் இணைத்துள்ளது என்றார்.

இதற்கிடையில் கூகலின் AI தளங்களில் ஏற்படும் பிழைகள் பற்றி இணையவாசிகள் குறைகூறுவதாகவும் BBC குறிப்பிட்டது.

பயனீட்டாளர்கள் பொறுப்பாகச் செயல்பட வேண்டும் என்று சொல்வதற்குப் பதில் கூகல் அதன் AI தளங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.
 
ஆதாரம்: BBC

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset