
செய்திகள் மலேசியா
பாஸ் கட்சி பெரிக்கத்தான் நேசனலின் சின்னத்தைப் பயன்படுத்தும்: மொஹைதின் யாசின் தகவல்
கோலாலம்பூர்:
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி பெரிக்கத்தான் நேசனலின் சின்னத்தைப் பயன்படுத்தும் என டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தெரிவித்துள்ளார்.
பெர்சாத்துவும் பாஸ் கட்சியும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அக் கூட்டணியின் தலைவருமான அவர் நேற்று குறிப்பிட்டார்.
"பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதை அக்கட்சியின் தலைமைத்துவம் உறுதி செய்யலாம்.
"உதாரணமாக, ஜொகூர் மாநிலத்தில் பெர்சாத்து மட்டுமல்லாமல், பாஸ் கட்சியும் இந்தச் சின்னத்தில் போட்டியிடும்.
"இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவே நான் அறிகிறேன். அந்த முடிவு இப்போதும் நீடிப்பதாக நினைக்கிறேன். எனினும் தொகுதிப் பங்கீடு தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
"மேலும் பல கட்சிகள் பெரிக்கத்தான் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. எனினும் இந்த விவகாரத்தை அக் கட்சிகள் கவனமாக அணுகுகின்றன," என்றார் மொஹைதின் யாசின்.
அமைச்சரவை பொறுப்புகள், துணைப் பிரதமர் பதவி ஆகியவை குறித்து தாம் பிரதமருடன் ஆலோசனை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், சில தினங்களுக்கு முன்பு இந்த ஆலோசனை நடைபெற்றது என்றார்.
அப்போது பிரதமருக்கும் பெரிக்கத்தான் கூட்டணிக்கும் இடையே முன்பு செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை பரீசிலிக்க வேண்டுமென தாம் பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாகவும் மொஹைதின் கூறினார்.
"பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமருடன் பேசினார். அரசாங்கத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது மட்டுமல்லாமல், புதிய நியமனங்கள் குறித்தும் பேசப்பட்டது.
நாங்கள் கூடுதலாக எதையும் கேட்கவில்லை. ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டவை குறித்தே கேட்கிறோம். அவற்றுள் துணைப் பிரதமர், அமைச்சர் பதவிகள் அடஙகும்," என்றார் மொஹைதின் யாசின்.
இதற்கிடையே, ஒருசில தொகுதிகளில் பாஸ் கட்சி சொந்தச் சின்னத்தில் போட்டியிடும் என அதன் உச்சமன்ற உறுப்பினர் அஹ்மத் அம்ஸத் ஹாஷிம் கூறியுள்ளார்.
இது குறித்த அறிவிப்பை கட்சித் தலைவர் ஹாடி அவாங் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm