செய்திகள் இந்தியா
பான் கார்டு-ஆதார் எண் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம்
புது டெல்லி:
பான் கார்டு-ஆதார் எண் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த இணைப்புக்கு ஜூன் 30 வரை ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 1 முதல் அபராதம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
போலியாக வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வது, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்பட பல்வேறு நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்காக பான்-ஆதார் கார்டு இணைப்பை இந்திய அரசு கட்டாயமாக்கியது.
ஏனெனில், ஒருவர் பல போலியான முகவரிகளில் பல்வேறு பான் கார்டுகளைப் பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றாலும் அவரால் ஓர் ஆதார் அட்டை மட்டுமே பெற முடியும்.
எனவே, பான் கார்டு - ஆதார் எண் இணைப்பு மூலம் போலி பான் கார்டுகள் முடக்கப்படும். பான்-ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டு 2023 மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், அபராதத்துடன் மட்டுமே இந்த இணைப்பை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜூன் 30 வரை ரூ.500 அபராதமாக இருந்த நிலையில் ஜூலை 1 முதல் அபராதம் ரூ.1,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 5:46 pm
இந்தியாவில் சுட்டெரிக்கும் வெயில்: 47.6 டிகிரி செல்சியஸைத் தொட்ட வெப்பம்
April 29, 2026, 12:45 pm
வங்கிப் பணத்திற்காகத் தம்பியின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்த அண்ணன்: ஒடிசாவில் நிகழ்ந்த சோகம்
April 29, 2026, 12:30 pm
எரிபொருள் வரி விலக்கு இல்லாமல் இந்திய விமான நிறுவனங்களின் செயல்பாடு முடங்கும் நிலையில் உள்ளது
April 28, 2026, 4:05 pm
குழந்தை உயிருடன் வாய்க்காலில் வீசப்பட்ட அவலம்: 6-வது பெண் குழந்தை என்பதால் பாரமானதா?
April 28, 2026, 3:48 pm
சமையல் தகராறில் நேர்ந்த விபரீதம்: மனைவியின் அரிவாள் வீச்சில் கணவன் பலி
April 28, 2026, 2:45 pm
வெளிநாட்டு பெண்ணுக்கு நடந்த அவல நிலை: பயணிகளுக்கு இந்தியா பாதுகாப்பானதா?
April 27, 2026, 6:32 pm
25 ஏக்கரில் கல்லூரி... வெறும் 15 மாணவர்கள்; ரூ.289 கோடி விழலுக்கு இறைத்த நீர்: PDUIA-ன் அவல நிலை
April 27, 2026, 5:20 pm
புதுடில்லியிலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு: ஐவர் காயம்
April 27, 2026, 3:17 pm
