
செய்திகள் இந்தியா
பான் கார்டு-ஆதார் எண் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம்
புது டெல்லி:
பான் கார்டு-ஆதார் எண் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த இணைப்புக்கு ஜூன் 30 வரை ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 1 முதல் அபராதம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
போலியாக வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வது, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்பட பல்வேறு நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்காக பான்-ஆதார் கார்டு இணைப்பை இந்திய அரசு கட்டாயமாக்கியது.
ஏனெனில், ஒருவர் பல போலியான முகவரிகளில் பல்வேறு பான் கார்டுகளைப் பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றாலும் அவரால் ஓர் ஆதார் அட்டை மட்டுமே பெற முடியும்.
எனவே, பான் கார்டு - ஆதார் எண் இணைப்பு மூலம் போலி பான் கார்டுகள் முடக்கப்படும். பான்-ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் பல்வேறு முறை நீட்டிக்கப்பட்டு 2023 மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், அபராதத்துடன் மட்டுமே இந்த இணைப்பை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜூன் 30 வரை ரூ.500 அபராதமாக இருந்த நிலையில் ஜூலை 1 முதல் அபராதம் ரூ.1,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm