செய்திகள் இந்தியா
எம்பிக்களின் இலவச ரயில் பயண செலவு கட்டணம் ரூ. 62 கோடி - ஆனால் மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து
புது டெல்லி:
எம்.பி.க்களுக்கு அளிக்கப்படும் இலவச ரயில் பயணத்துக்கு அளித்துள்ள சலுகையால் மத்திய அரசுக்கு ரூ.62 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், எம்பிக்களின் இந்த கட்டணச் செலவு வெளியாகி உள்ளது.
நடப்பு எம்.பி.க்கள் ரயில்களில் முதல் வகுப்பு அல்லது சொகுசு வகுப்பு பெட்டிகளில் மனைவியுடன் இலவச பயணம் மேற்கொள்ளலாம். முன்னாள் எம்.பி.க்கள் ஏசி2ம் வகுப்பு பெட்டிகளில் மனைவியுடனும் அல்லது ஏ.சி. முதல் வகுப்பில் தனியாக இலவச பயணம் மேற்கொள்ளலாம்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கௌர் மக்களவைச் செயலகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கான பதிலில், "2017 முதல் 2022 வரையில் நடப்பு எம்.பி.க்களின் இலவச ரயில் பயணச் சலுகைக்கான செலவாக ரூ.35.21 கோடியும், முன்னாள் எம்.பி.க்களின் செலவாக ரூ.26.82 கோடியும் ஆனதாக ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து ரசீது வந்துள்ளது.
கரோனா பாதிப்பு அதிகரித்திருந்த 2020-21 காலத்திலும் எம்.பி.க்களின் இலவச ரயில் பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதில், நடப்பு எம்.பி.க்கள் ரூ.1.29 கோடிக்கும், முன்னாள் எம்.பி.க்கள் ரூ.1.18 கோடிக்கும் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் மற்றும் பிற சிறப்புப் பிரிவினருக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை ரயில்வே அமைச்சகம் கரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் ரத்து செய்தது.
2020, மார்ச் 20 முதல் 2022, மார்ச் 31ஆம் தேதி வரையில் ரயிலில் பயணம் மேற்கொண்ட 7.31 கோடி மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படவில்லை என்று ரயில் அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 1:29 pm
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
November 2, 2025, 11:55 am
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
