நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேபாளத்தில் வேகமாக பரவும் காலரா: பானிப்பூரிக்கு தடை

காத்மாண்டு:

நேபாளத்தின் காத்மாண்டு பெருநகர் பகுதியில் திடீரென காலரா பரவல் அதிகரித்துள்ளதால் பகுதியில் பானிப்பூரி உள்பட சாலையோர உணவுகளை விற்பதற்கு பெருநகராட்சி தடை விதித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காத்மாண்டு பகுதியில் 12 பேருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அதையடுத்து சாலையோர உணவுகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரமற்ற உணவுகள் மூலம் காலரா பரவுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, நகர உணவகங்களில் உணவுப் பொருள்களின் தரத்தை ஆய்வு செய்யவும் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய்கள் மற்றும் வடிகால்களின் சுகாதார நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்குமாறு அந்தத் துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset