நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பொருட்களின் விலை உயர்வு: கட்டுமானத் துறையை விட்டு விலகும் குத்தகையாளர்கள்

கோலாலம்பூர்:

கட்டுமான துறைக்கு தேவையான பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் பல குத்தகையாளர்கள் இத் துறையை விட்டே ஒதுங்கி விட்டனர்.

நாட்டில் அனைத்து விதமான பொருட்களும் விலை உயர்ந்து விட்டது. இதில் கட்டுமானத் துறை மட்டும் விதி விலக்கல்ல. கட்டிடத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத்திற்கு தேவையான மணல், செங்கல், இரும்புகள் உட்பட அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துவிட்டன.

இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பூமிப்புத்ராக்கள், பூமிப்புத்ரா அல்லாத குத்தகையாளர்கள் தங்களின் சிஐடிபி லைசென்சுகளை புதுப்பிக்கவில்லை.

லைசென்சை புதுப்பிக்கவில்லை என்றால் அவர்கள் இந்த குத்தகைத் தொழிலை விட்டு விலகி விட்டனர் என்று தான் அர்த்தம்.

இந்நிலை நீடித்தால் வரும் காலங்களில் நாட்டில் ஒரு குத்தகையாளர்கள் கூட இருக்க மாட்டார்கள் என்று மலேசிய மலாய் குத்தகையாளர்கள் சங்கத்தின் தலைவர் முஹம்மத் ஃபாட்ஸில் ஹசன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset