செய்திகள் இந்தியா
டெல்லிக்கு புறப்படவிருந்த நான்கு சென்னை விமானங்கள் ரத்து
புதுடெல்லி:
டெல்லியில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் கொடுத்திருந்த நிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் மழையின் காரணமாக, நிலவும் மோசமான வானிலையால், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில், விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு விமான சேவை குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று டெல்லி விமான நிலையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் பெய்த மழை, பலத்த காற்று வீச்சு ஆகியவற்றால் ஏற்பட்ட வானிலை பாதிப்புகளால் டெல்லி விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லக்கூடிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 6:01 pm
மாணவியைக் காதலிப்பதாகக் கூறிய பேராசிரியருக்குச் செருப்படி; வைரலாகும் காணொலி
March 26, 2026, 6:00 pm
முகநூல் நட்பால் வந்த வினை: ஓய்வுபெற்ற அதிகாரியைக் கடத்தி கொள்ளையடித்த பெண் கைது
March 26, 2026, 5:58 pm
"ராகுல் காந்திக்கு அடிப்படை அரசியல் புரியவில்லை": கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதிலடி
March 26, 2026, 5:28 pm
குஜராத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றபட்டது
March 26, 2026, 5:08 pm
தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்
March 25, 2026, 6:20 pm
"எனது வாகனத்தில் இஸ்லாமியர்களுக்கு அனுமதியில்லை": ரேபிடோ ஓட்டுநர் பணிநீக்கம்
March 25, 2026, 10:01 am
மாட்டை பலி கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு: இளைஞருக்கு கொலை மிரட்டல்
March 24, 2026, 5:16 pm
