நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட்-19 தொற்றுக்கு 1,817 பேர் பாதிப்பு

புத்ராஜெயா:

கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 1,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,491,320 ஆக உயர்வு கண்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 768 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூரில் 331, பினாங்கில் 140, மலாக்காவில் 104, நெகிரி செம்பிலானில் 98, பேராக்கில் 85, ஜொகூரில் 69, கெடாவில் 52, சபாவில் 43, புத்ராஜெயாவில் 36, சரவாக்கில் 35, பகாங்கில் 22, கிளந்தானில் 15, திரெங்கானுவில் 12, பெர்லிசில் 6, லாபுவானில் 1 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு வரை 1,087 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

40 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 129 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

ஜொகூரில் 115 பேரும், சபாவில் 58 பேரும் சிகிச்சை பெறுகின்றனர் என சுகாராத்துறை அமைச்சு கூறியது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset