செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 1,817 பேர் பாதிப்பு
புத்ராஜெயா:
கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 1,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,491,320 ஆக உயர்வு கண்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 768 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் 331, பினாங்கில் 140, மலாக்காவில் 104, நெகிரி செம்பிலானில் 98, பேராக்கில் 85, ஜொகூரில் 69, கெடாவில் 52, சபாவில் 43, புத்ராஜெயாவில் 36, சரவாக்கில் 35, பகாங்கில் 22, கிளந்தானில் 15, திரெங்கானுவில் 12, பெர்லிசில் 6, லாபுவானில் 1 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு வரை 1,087 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
40 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 129 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
ஜொகூரில் 115 பேரும், சபாவில் 58 பேரும் சிகிச்சை பெறுகின்றனர் என சுகாராத்துறை அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
April 26, 2024, 6:40 pm
வேட்புமனு தாக்கலை முன்னிட்டு கோல குபு பாருவில் 5 சாலைகள் நாளை மூடப்படுகிறது
April 26, 2024, 6:25 pm
கோல குபு பாரு இடைத் தேர்தல் அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளது: அஸ்மின் அலி
April 26, 2024, 5:59 pm
குத்ரி காரிடார் விரைவுச்சாலையின் (ஜிசிஇ) இரண்டு சந்திப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டன
April 26, 2024, 5:32 pm
சுபாங் விமான நிலையத்தில் இலகுரக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது
April 26, 2024, 4:38 pm