செய்திகள் மலேசியா
வேட்புமனு தாக்கலை முன்னிட்டு கோல குபு பாருவில் 5 சாலைகள் நாளை மூடப்படுகிறது
கோல குபு பாரு:
வேட்புமனு தாக்கலை முன்னிட்டு கோல குபு பாருவில் 5 சாலைகள் நாளை மூடப்படுகிறது.
இதனை உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் பைசல் தஹ்ரிம் இதனை கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாளை வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கோல குபு பாருவின் ஜாலான் மெர்டேகா, ஜாலான் அப்துல் ஹமித், ஜாலான் டத்தோ மூடா ஜாபர், ஜாலான் மாட் கிலாவ், ஜாலான் கமாருடின் ஆகிய சாலைகள் மூடப்படுகின்றன.
நாளை அதிகாலை 12.01 மணி முதல் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறும் வரை இந்த சாலைகள் மூடப்படும்.
ஆகவே மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm