செய்திகள் மலேசியா
சுபாங் விமான நிலையத்தில் இலகுரக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது
சுபாங்:
இன்று காலை புறப்பட்ட இலகுரக விமானம் ஒன்று இரண்டு நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இச் சம்பவம் சுபாங் விமான நிலையத்தில் நடந்தது.
சம்பந்தப்பட்ட இலகுரக விமானத்தின் விமானிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்று பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நோரஸ்மான் மஹ்மூத் கூறினார்.
விமானம் காலை 8.26 மணிக்கு புறப்பட்டது. அதன் பின் சுபாங் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அவசர அழைப்பு வந்தது.
பின்னர் விமானம் 8.28 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விமானம் ஓடுபாதையில் இருந்து அகற்றப்படும் வரை, சம்பந்தப்பட்ட விமான நிலையத்தின் ஓடுபாதை விமான நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm